søndag 22. oktober 2017

கோச்சு வண்டியும் அப்புகாமியும்!

கோச்சு வண்டியும் அப்புகாமியும்!

அப்புகாமி பெயர்தான் சிங்களம் ஆனால் சிங்களம் தெரியாத தமிழ் மட்டும் பேசும் கரையோரச்சிங்கள சமூகம் சார்ந்தவர், எனது ஊருக்கு பருவகால இடம்பெயர்ந்து மீன்பிடி க்கும், சிலாபம் புத்தளம் நீர்கொ ழும்பு, வென்னப்புவா இப்படிப்ப ட்ட இடங்களில் இருந்து மீன்பிடிப்ப தற்காக வருவார்கள், பின்னர் பருவ காலம் முடிந்ததும் வள்ளம் வலைகளோடு சார சாரையாக அவரவர் இடங்களுக்கு சென்றுவிடு வார்கள், ஒரு சிலர் தொடர்ந்தும் என் கிராமத்தில் தங்கி எங்களில் ஒருவராக மாறிப்போவார்கள், அப்படி மனம் மாறி இதயத்தால்  என் ஊரோடு சங்கமமானது அப்புகாமியின் குடும்பம், 1964 ஆண்டு வீசிய புயலில் அப்புகாமியின் அப்பா காணாமல் கடலில் தொலைந்தவர்தான்! அதன் பின் அப்புகாமியின் அம்மா இடிய ப்பம் விற்றுத்தான் வறுமையோடு போராடினார்கள். அப்புகம்மையின் அம்மா, அக்கா, அவரது பெரியதாய் இவர்கள் எல்லோரையும் நாங்கள், நோனா அக்கா என்றுதான் செல்லமாக அழைப்போம், நோனாக்களின் இடியப்பம் அதைவிட நோனாக்கா செய்யும் சம்பல் தனிச்சுவை,  அப்பு காமியும் நானும் பள்ளித்தோழர்கள், இன்றும் இணைபியா நணபர்கள், என்னிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை அன்பைத்தவிர, ஒரு முறை துரம் மாஸ்டர் நிராவியால் புகையிரத இஞ்ஜின் இயங்குகிறது, அந்த நீராவி இயந்திரத்தை கண்டு பிடித்தவர் ஜேம்ஸ் ஸ்டீவன்சன் என்று எங்களுக்கு சொன்னார், அந்த நாள் சொல்லிவைத்தது போல என் கிராம த்துக்கு கரிக்கோச்சு வந்தது, நானும் அப்புகாமியும் அந்த கரிக்கோச்சை ஆவலோடு பார்க்கின்றோம் ஏதோ ஒரு மெக்கனிக் போல கீழே குனிந்தெ ல்லாம் அப்புகாமி ஆரச்சிபண்ணுகின்றான். கரிக்கோச்சியும் போய்வி ட்டது, அப்புகாமிக்கு ஒரு ஐடியா வந்தது அடே மச்சான் நாமும் சின்ன தாய் ஒரு கரிக்கோச்சி செய்துதால் என்ன என்றான். நானும் ஆமோதி த்தேன். திட்டம் தயாரானது. முதலில்பெரிய லக்ஸ்பிரே டின்னில் தண்ணீர் ஊற்றி அதை நன்றாக ஈயத்தால் ஒட்டி அடத்தோம், சிறிய வண்டியும் தயாரானது. இப்போது அதனை இயக்கவேண்டும்,  அப்பொ ழுது எனது வீட்டுக்கு முன்பாக  வி ஜீ டயஸ் அவர்களின் மீன்வாடியும் அதற்கு பின்னால் ஒரு கிணறும் இருந்தது. (இப்போது தேவராஜ் வீடுக ட்டும் இடம்) அந்த கிணற்றடியில் தான் நாங்கள் கோச்சுவிட தயாரா னோம். குளிக்கவந்தவர்கள், தண்ணிற் மெண்டுகொண்டு போக வந்த வர்கள் எல்லோரும் கூட்டமாக கூடிவிட்டார்கள். நான் பெருமையாக சொன்னேன் இடோ பாருங்கள் இந்த வண்டி மெதுவாக நகரும் என்று சொல்லி, வண்டியில் உள்ள நெருப்பை ஊதுகின்றேன். உடனே அப்பு காமியின் அக்கா சின்ன நோனா, நான் ஊதுகின்றேன் என்று சொல்லி ஒரு ஊது குழலோடு வந்து நெருப்பை ஊதுகின்றாள், அடுத்தது என்ன நடக்கப்போகின்றது என்பதில் எல்லோருக்கும் ஆவல், சனம் கூட்டமாக் நெருங்கிவிட்டார்கள், நோனா நன்றாக‌ ஆர்வமாக் ஊதுகின்றாள், நானும் இன்னும் நல்ல என்று  ஊக்குவிக்கின்றேன். திடீரென்று பாரிய சத்த த்தோடு லக்ஸ்பிறே டின் வெடிக்க, சுடுதண்ணி எல்லோர்மீதும் பட, சனம் செய்வதறியாது விழுந்தடித்து ஓடினார்கள். கடைசியில் நோனா அக்கா ஆஸ்பத்திரியில், நானும் அப்புகாமியும் காட்டுக்குள் தலைமறவு.
எங்களின் விசித்திரமான ஆராய்ச்சி இப்படி சோகத்தில் முடியும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. அந்த நாளை இன்னமும் சிந்தித்துப்பா ர்க்கின்றேன். அன்புடன் பேசாலைதாஸ்

fredag 20. oktober 2017

டிக் டிக் டிக் என்று கையும் ,டக் டக் டக் என்று இதயமும்,,,,,,,,,,,

டிக் டிக் டிக் என்று கையும் ,டக் டக் டக் என்று இதயமும்,,,,,,,,,,,

உலகத்தமிழர் பேரவைத்தலைவர் அருட்திரு இம்மனுவேல் அடிகளாரின் இலங்கை விஜயம் குறித்து தமிழ் மக்களிடையே கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எனது பதிவை இங்கே எழுதுகின்றேன்.
முள்ளிவாய்க்காலில் கடுமையன போர் நடந்து கொண்டிருக்கின்றது, மே 18 திகதி பிரபாகன் இறந்துவிட்ட அரசு செய்தியுடன் போர் முடிவுக்கு வருகின்றது அதற்கு முன்னைய நாள் நோர்வேயின் தேசிய நாள் மே 17, நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பிரமாண்டமான பேரணி தமிழ் மக்களினால் முன்னெடுக்கப்படுகின்றது, அதற்கு உரையாற்ற அருட்தந்தை அவர்கள் ஓஸ்லோ வந்திருந்தார். அவரோடு அன்று போராட்ட நிகழ்வுகள் குறித்து நீண்ட நேரம் அவரோடு உரையாடினேன். அப்போது அருட்தந்தையின் உணர்வுகளை என்னால் துள்ளியமாக எடைபோட முடிந்தது. தேசியதலைவரின் கணிப்புக்கும், அவரின் மரியாதைக்கும் இன்றும் என்றும் அருட்தந்தை அவர்கள் உரித்தானவர் தான். அருட்தந்தை அவர்களை இலங்கை நாட்டுக்கு விஜயம் செய்வதை இலங்கை அரசு தடை செய்தது, ஏன் இந்தியா கூட அவரின் இந்திய விஜயத்தில் குறுக்கிட்டது.  இப்படிப்பட்ட ஒருவர் இன்று கொழும்பில் இலங்கை அரசு மற்றும் அமெரிக்க தூதுவர்களோடு கைகுலுக்கி  பேசுகின்றார் என்றால் இதன் பிற்புலத்தில் ஏதோ ஒரு நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது என்பது மட்டும் உறுதியாகின்றது. இலங்கை அரசியல் வரலாற்றை உற்றுநோக்கினால், சிங்கள பெளத்த மத பிரிவேனாக்களின் ஆதரவோடு தான் இலங்கை அரசாங்கம் இயங்கிக்கொண்டு இருக்கின்றது. இலங்கையின் தேசியவாத உணர்வு, மாகாவம்ச போதனையுடன் சிங்கள இனவெறியாக உருமாற்றப்பட்டுள்ளது. நாம் இலங்கையர் என்ற தேசிய உணர்வு எவரிடமும் இல்லை அது வளர்த்து எடுக்கப்படவும் இல்லை. பெளத்த மத தலைவர்களை எதிர்த்து, இலங்கையின் தேசிய நலனை முன்னெடுக்க எவரும் துணியவில்லை அதற்கான ஆளுமையும் அருகதையும் சிங்கள அரசியல்வாதிகளிட‌ம் இல்லை. இருக்கப்போவதும் இல்லை. இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டுமென்றால் அது சிங்கள பெளத்த மத பீடத்தின் மனமாற்றதிலும், சிங்கள மக்கள் மீது ஏற்படும் ஒற்றுமை விழிப்புணர்விலுமே தங்கியுள்ளது.  ஆயுத போராட்டம் தமிழ் மக்களிடம் சிங்கள அரசினால் திணிக்கப்பட்டது என்ற மாபெரும் உண்மையை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவைக்கவேண்டும். அதுமட்டுமல்ல, போர் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய குற்றச்செயல்கள் இழைக்கப்பட்டுள்ளன அதன் விழைவாக தமிழ் மக்கள் கடுந்துயர் அடைந்த கதை சிங்கள மக்களின் காதுகளுக்கு சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை. போர்குற்றம் பற்றிய விழிப்புணர்வு சிங்கள மக்களிடையே விதைக்கப்படவேண்டும் என்று அருட்தந்தை கொழும்பில் கூறியதை இங்கு மீண்டும் கோடிட்டு காட்டவிரும்புகின்றேன். சிங்கள மதபீடத்தின் கடும் போக்கில் இருந்து அது இறங்கிவரவேண்டும் அவ்வாறு வருவதன் ஊடாகவே இனப்பிரச்சினை தீர்வில் காத்திரமான முன் எடுப்புகள் சத்தியமாகும். கடும் போக்கில் இருந்து பெளத்த மதபீடம் இறங்கி வரவேண்டுமானல் அதற்கான சமிஞ்சைகளை தமிழ் தரப்பிலும் முன்னெடுக்கப்படவேண்டும்.அந்த வகையில் தமிழ் இனப்பிரச்சனையில் கத்தோலிக்க கிறிஸ்தவ அருட்குருக்கள் தன்னுயிரை தியாகம் செய்திருக்கின்றார்கள்.அருட்திரு இம்மானுவேல் அடிகளார் முன்னோடியாக இருப்பது யாவரும் அறிந்த விடயம். அவ்வாறு இருக்கையில், தமிழ் தரப்பு சாதாகமாக மத தலைவர்கள் சற்று இறங்கிவந்து நல்லெண்ண சமிக்ஞைகளை முன்னெடுப்பது அவசியமாகின்றது, அதனையே சர்வ தேச‌ சமூகமும் எதிர்பார்க்கின்றது. அதனை கருத்தில் கொண்டு அருட்குருவானவருக்கு  கத்தோலிக்க உயர் பிடமான வத்திக்கான் ஊடாக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதை தமிழ் ஊடகங்கள் உணர்ந்துள்ளார்களா? என்பது கேள்விக்குறியாகவுள்ளது. மற்றப்படி தேசியதலைவரின் கடிகாரம் அருட்குரு இம்மானுவேல் அவர்களின் இடது கையில் டிக் டிக் டிக் என்று அடிதுக்கொண்டுதான் இருக்கிறது, கூடவே அவரின் இதயமும் டக் டக் டக் என்று தமிழுக்காகா அடித்துக்கொண்டுதான் இருக்கின்றது அன்புடன் பேசாலைதாஸ்

torsdag 19. oktober 2017

என் நினைவில் நிற்கும் ஆசிரியை!

என் நினைவில் நிற்கும் ஆசிரியை!

என் பள்ளி வாழ்வில் பல ஆசிரியர்களை என்னால் மறக்கமுடிவதில்லை அவர்களிள் ஒருவர் தான் திருமதி ஜெகநாதன் ஆசிரியை, அவரின் கணவர் பேசாலை டின் மீன் தொழிற்சாலையின் முகாமையாளாராக  பணிபுரிந்தவர்.  ஜெகநாதன் ஆசிரியை பேசாலைக்கு வந்தபின்புதான் வெற்றித்தாயின் அனுக்கிரகத்தால் ஒரு ஆண் மகனை பெற்றெடுத்தாள்! அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், வெற்றி அன்னையின் அருளால் தான் ஒரு மகனை பெற்றெடுத்ததாக அவரே கூறுவதுண்டு.  ஜெகநாதன் ஆசிரியர் மிகவும் கண்டிப்பான ஆசிரியர் அதேவேளை ஒரு தாய்க்குரிய கருனை அவரிடம்  எப்பொழுதும் உண்டு.தன் மாணக்கர்கள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்று அறிவுறை கூறுவதுண்டு. அவர் தந்த ஊக்கமே எனக்கு லண்டன் புறுனல் பல்கலைக்கழகத்தில்  M.A  பட்டம் படிக்கவேண்டும் என்ற உந்துதலை எனக்கு அளித்தது என்றால் அது மிகையாகது! ஜெகநாதன் ஆசிரியை பார்க்கும் போதெல்லாம் மஞ்சள் குங்குமம் பொங்கும்  மகா லட்சுமியை நினைவுக்கு கொண்டுவரும்.  அவர் எங்களுக்கு தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் படிப்பிக்கும் பாங்கு மிக நேர்த்தியானது. ஒருபோதும் பிரம்பை கையில் தொட்டதே இல்லை ஆனால் டீச்சர் பார்க்கும் ஒரு பார்வையே போதும், மாணவர்களுக்கு உள்ளூர வியர்த்து கொட்டும். எவ்வளவுதான் கண்டிப்பாக இருந்தாலும், அவ்வப்போது நகைச்சுவையாக எங்களோடு உரையாடுவதுண்டு. எங்கள் வகுப்பிலே சகாயன் சில்வா என்ற குறும்புக்கார மாணவர் இருந்தார். அடிக்கடி ஏதாவது ஆங்கில வசனத்தை எடுத்துவிடுவான் அதற்கு உரிய அர்த்தம் அவனுக்கே தெரியாது. ஒரு முறை சகாயன் சில்வா, எமது சக மாணவியான மிரியம் குருஸுடன் வாய்த்தர்க்கம் செய்தான் அப்பொழுது திடீரென்று  I don't care   என்று ஒரு ஆங்கில வசனத்தை எடுத்துவிட்டான்.அப்பொழுது  நண்பி மிரியம் அப்படியென்றால் என்ன அர்த்தம் என்று சகாயன் சில்வாவிடம் கேட்ட பொழுது அவன் மிகச் சர்வ சாதாரணமாக  நான் ஒரு சாதாரண மனிதன் என்று சொன்னான். அவன் சொன்னதை நாங்களும் நம்பிவிட்டோம், அதே நேரம் பார்த்து வகுப்பறைக்குள் நுழைந்த ஜெகநாதன் டீச்சர் சாகயன் சில்வாவிடம் I don't care என்றால் அதன் அர்த்தம், நான் பொருட்படுத்தவில்லை என்று விளக்கம் கொடுக்க, உடனே சகாயன் சில்வா அதைத்தான் டீச்சர் நான் ஆங்கிலத்தில் சொன்னேன் என்று டக்கென்று பதில் சொன்னதும் டீச்சர் உட்பட நாங்கள் அனைவரும் குழுங்கி குழுங்கிச் சிரித்தோம்.
பள்ளி வாழ்க்கையே வண்ணமயமான கனவுக்கலவைதான்! அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

அந்த நாள்!

அன்பர்களே! நம் ஒவ்வொருவருக்கும் பள்ளிப்பருவ வாழ்க்கையை நினைக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு ஏக்கம் மனதுக்குள் குடி கொள்ளும் அந்தக்காலம் திரும்பவராதா! என்ற அந்த ஏக்கம் தான் அது! நான் என் கிராமத்தை விட்டு 1978 ஆண்டில் இருந்தே பிரிந்துவிட்டேன், குருமடவாழ்வு, பல்லகலைக்கழக வாழ்வு, பின்னர் இந்தியாவில் சில வருடங்கள் அஞ்ஞாத வாசம் ( ஒரு போராளியாக) பின்னர் ஐரோப்பிய புலம் பெயர்வு, இப்படியே வாழ்க்கை அலைக்கழிந்துவிட்டது! இருந்தாலும் என் கிராமத்தின் நினைவுகள் இப்பவும் பசுமரத்தாணி போல மனதில்,,,,, இப்போது இருக்கும் கிராமம் என் மனப்பதிவில் இல்லை, இருப்பதெல்லாம் 1978 ஆண்டுகளுக்கு முன்பிருந்த என் கிராமத்து பதிவுகளைகளைத்தான் இப்பவும் நான் மீட்டிக்கொண்டிருக்கின்றேன். ஆலமரங்கள் இருக்கும், ஊஞ்சலாடிக்கழிக்க நீள விழுதுகள் தொங்கும், அருகிலே குட்டைக்குளம் இருக்கும், அதிலே பனைமரக்குற்றிகளை கப்பல் என நினைத்து அதில் ஏறிக்குதிக்கும் சின்னஞ்சிறார்கள், ட்ரெக்டர் வண்டியாய், கத்தாளை, அயலை என ஏரளமாய் மீன் பாயும் என் அழகான ஊர் இப்போது இல்லை. அப்போது உறவுக்காய் வாழ்ந்த உள்ளங்கள் இப்போது இல்லை, இப்போது இருப்பதெல்லாம் வரட்டு கெளரவமும் ஏளனம் கலந்த உள்ளங்கள் நிறையவே என் ஊரில் உண்டு, அந்த ஓலங்கள் இப்போது எதற்கு? விசயத்துக்கு வருகின்றேன். என் பள்ளி வாழ்க்கையில் எனக்கு ஓணான் பல்லி கிளிக்குஞ்சு அணில் குஞ்சு இவைகளில் அலாதி ஆசை, மற்ற நண்பர்கள் இந்திய சாரம் சரசரக்க தெருவெல்லாம் பருவங்களை சுற்றிய காலத்தில், இப்படி நான்!
அப்போ நான் ஒரு லூசுதானே! இருக்கட்டும், அணில் குஞ்சு பிடிக்க பள்ளிக்குட ஆலமரதின் கீழ் முட்டி வைத்து தேங்காய் சொட்டு, மிளகாய் வாட்டி அத்ற்குள் வைத்திருந்தேன். அதனை காக்கா கஸ்பார் பார்த்துவிட்டான்! மணி அடித்ததுதான் தாமதம் கஸபர் ஓடினான் என்முட்டியை எடுப்பதற்கு, முட்டியும் கவிழ்ந்து இருந்தது, நான் காக்கா கஸபாரை துரத்துகின்றேன். களைப்பாய் ஓடிய கஸ்பார் ஒரே மூச்சில் முட்டிக்குள் கைவிட்டு இழுத்தான் ஒரு பெரிய பாம்பு அவன் கையில்! நல்ல காலம் பாம்பு அவனை தீன்டவில்லை, அப்படி நடந்திரிந்தால் காக்க கஸப்பார் அமரர் கஸ்பாராகி 45 வருடங்கள் கழிந்திருக்கும், நினைக்க இப்பவும் அலாதி ஆனந்தம் தான் அன்புடன் பேசாலைதாஸ்

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...