mandag 25. desember 2017

மார்கழி நிலாக்காலமும் நத்தார் பண்டிகையும்!

மார்கழி நிலாக்காலமும் நத்தார் பண்டிகையும்!

பேசாலை பங்கின் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்வுகள் கார்திகை மாதம் இறுதி நாள் கொடியேஏற்றத்துடன் களைகட்ட ஆரம்பித்துவிடும். பண்டிகை கால சாறிக்கனவுகள், இளங்குமரிகளின் வண்ண சட்டைக்கனவுகள் சிறகடிக்க, இந்திய சாறி வாங்கும் பயணங்கள் ஆரம்பமாகும்! கார்த்திகை மாத தொடக்கத்திலேயே அம்மாக்கள் கோழி முட்டைகள் சேர்க்க ஆரம்பிப்பார்கள். கிறிஸ்மஸ் பண்டிகை என்றாலே அரிசி மாவிலே செய்யப்படும் ஊர்கேக்கு இப்பவும் வாயில் எச்சில் ஊறுகின்றது. அமெரிக்கா McDonald  KFC இதெல்லாம் எங்கட பெத்தாச்சிமார்கள் செய்யும் ஊர் கேக்கு இணையாகுமா?  கார்த்திகை மாத இறுதியில் கொடியேற்றம் பட்டாசு வெடி ஓசையோடு ஆரம்பமாகும். ஒன்பது நாள்( நவ நாள்) கொண்டாட்டம் ஒவ்வொரு நவநாளையும் ஒவ்வொரு பட்டம் தரித்தவர்கள் கொண்டாடுவார்கள்.லெம்பேட் குருஸ் பெர்ணன்டோ பிரீஸ் இப்படியாக ஒவ்வொரு பட்டக்காரனும் உனது நவநாள் சிறப்பா? எனது நவநாள் சிறப்பா? என்ற போட்டி! பட்டாசு வெடி ஓசைக்ளே வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும். அதற்கு ஏற்றாற்போல வாடை காற்றின் அமோக இறால் பாடும் கைகொடுக்கும்: சிறுவர்களாகிய எங்களை சொல்லவா வேண்டும்? நவநாள் கொடி மணியுடனே ஊருக்குள் வலம் வருவதுடன் பீடத்தில் உதவுவதில் பெரிய போட்டி! ஒவ்வொரு நவநாளிலும் மாதா சிரூபத்தை கோவில் பின் பக்கத்தில் இருந்து மணி ஓசையுடன் சுவாமி பீடத்திற்கு ஏந்தி வருவார் அப்போது மாசில்லாமல் உற்பவித்த எங்கள் மாதாவே என்ற பஜனையை N.A.Dias சங்கீர்தம்பிள்ளை மூச்சுவிடாமல் பாடுவார் ஆலயமணிகள் ஒலிக்கும்,  பட்டம் தரித்தவர்களின் பட்டாசு வெடிகள் கதைப்பிளக்கும்! குறும்புக்கார இளைஞர் சிலர் மாவில்லாமல் அப்பம் சுட்ட எங்கள் பெதாச்சியே! என்று கிண்டலாக பாடுவது இன்னமும் துருவ‌ நாடு வரை கேட்கின்றது. இறுதி நாள் வேஸ்பர் முன்பு இரவிலே சருகை தேர்க்கூட்டிலே வண்ண விளக்குகளுடன் அன்னையை தேரில் ஏற்றி கோவில் வலம் வருவார்கள் அற்புதமான இரவுக்காட்சி! இப்போது வெறும் கனவாகவே வந்து போகின்றது! அடுத்த நாள் ஆடம்பர பூசையுடன் கோவில் விழா நிறைவு பெற, கிறிஸ்மஸ் பண்டிக்கைகான ஆயத்தவேலைகள் ஆரம்பமாகும். பாட்டுக்கர குமரிகள் இரவு வேலையில் பாட்டு பாடுவதும், அதை நோட்டம் விட்டு காதல் அம்பு தொடுக்கும் காளையர் கூட்டமும் களிப்பான காலம் அது! அம்புறோஸ் ஐயா குடில் அமைப்பதில் தனது எண்ணத்தை காட்ட, கரோல் இசையில் புதுமை புகுத்தும் செபஸ்டியான் குருஸ் மாஸ்டர்! ஆடினதெப்படியோ ஆஞ்சுகள் என்ற அந்த கரோல் பாட்டும், பிளசிடஸ், பிராகாசம் லெம்பேட் இணைந்து வெளியிட்ட முசாகிரீ நானா என்ற பாணியில் இரவில் வந்த இரட்சகரை என்ற அந்த கரோல் பாடல் இன்னும் இன்னும்,,,,, காதில்!இனிவருமா அந்த பொற்காலங்கள்  அன்புடன் பேசாலைதாஸ்

torsdag 30. november 2017

இந்த பேசாலைவெற்றி நாயகி ஆலையம் யாருக்கு சொந்தமானது?

இந்த  பேசாலைவெற்றி நாயகி ஆலையம் யாருக்கு சொந்தமானது? 

என்  இனிய உறவு களே! எனது கேள்வி உங்களுக்கு ஆச்சரி யமாக இருக்கின்ற தா?  இது தெரியாதா? வேறு யாருக்கு, பேசாலை மக்களின் உழைப்பிலே கட்டப் பட்டதால் இது பேசாலை மக்களுக்கு சொந்தமானது என்று நீங்கள் சொல்லக்கூ டும்! அதுதான் தவறு என்று நான் சொல்கின்றேன். திருச்சபைக்கு என்று ஒரு சட்டம் உள்ளது அதாவது The canon law of the Catholic Church (Latin: jus canonicum) என்று சொல்வார்கள். அந்த சட்டத்தின் பிரகாரம் எமது பேசாலை வெற்றிநாயகி ஆலையம் திருச்சபைக்கு சொந்தமானது. அதாவது மன்னார் மறை மாவட்ட பரிபா லகராக இருக்கும் ஆயருக்கும், அவரது நேரடி அதிகாரத்துக்கு உட்பட்ட பேசாலை பங்கு குருவே பேசாலை வெற்றிநாயகி ஆலையத்தின் நேரடி உரிமையாளர் ஆவார் ஆயினும் இர ண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பின் இந்த உரிமைகளும் அதிகாரங்களும், பங்கு மக்கள் ஊடாக, பங்கு குரு செயல்ப டுத்தும் ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதால் ஆலைய‌ அதிகாரங்கள், பங்கு சபையால் குருவோடு சேர்ந்து பரிபாலி க்கப்படுகின்றது. இதை இங்கு நான் ஏன் பதிவு செய்ய முய ற்ச்சிக்கின்றேன் என்றால் நோர்வே நாட்டில் ஓஸ்லோ மற்றும் பேர்கன் பங்கு சபைகளில் நான் செயலாளராக பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு. இங்கே பங்கு சபையானது பொது சபையின் உத்தரவாத்துடன் ஒரு நிறைவேற்று சபையாக செயல்படுகின்றது. பொதுக்கூட்டத்தில் தமது செயல்பாடு களுக்கான கேள்விகள் விமர்சனங்களுக்கு அது தார்மீக பொறுப்போடு விளக்கம் அளிக்கின்றது.
                                                                                      பங்கு சபைக்கு என்று ஒரு யாப்பு இருத்தல் அவசியம், அந்த யாப்பின் ஒவ்வொரு சரத்தும் பொதுமக்களின் அனுமதியுடன், அவர்களது அபிப்பி ராயங்களை உள்வாங்கி உருவாக்கப்படல் வேண்டும். இந்த யாப்பை உருவாக்க ஒரு யாப்பு நிர்ணய சபை இருக்கவே ண்டும். அந்த நிர்ணய சபையில் கல்விமான்கள், எமது பங்கை சார்ந்த குருக்கள், கன்னியாஸ்திரிகள், பொது நிலையினர் இப்படி பலதர்ப்பட்டவர்கள் அங்கத்துவம் பெற்று அவர்கள்து ஆலோசனை பெறப்படவேண்டும். ஆக மொத்தத்தில் பங்கு சபையின் நிர்வாகத்தில் என்ன நடக்கின்றது என்பதை ஜனநா யக அடிப்படையில், அறிக்கைகள் மூலமாக பொதுமக்களுக்கு அறிவிக்கவேண்டும். பங்கு சபையின் நிர்வாகம் மற்றும் பங்கு குரு மீது அண்மையில் பல விமர்சனங்கள் முக நூலிலே பதி வானதினாலே இதை நான் எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்ட து. நல்ல விமர்சனங்கள் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதுதான் ஆனால் அதுவே வீண் குழுப்பங்களை தோற்றுவிக்கக்கூடாது. எனவே நமது ஆலையம், நாம் என்ற உணர்வுடன்( We feeling) செயல்படுவோம், இந்த‌ நாம் என்ற உணர்வுத்தத்துவம் We feeling philosophy பற்றி லண்டன் புறுனல் பல்கலைக்கழ்கத்தில் நான் எழுதிய ஒரு ஆய்வு கட்டுரையை பிறிதொரு சந்தர்ப்ப த்தில் பதிய விடுகின்றேன். 
அதுவரை அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

mandag 20. november 2017

நமது ஞான மேய்ப்பர்கள்!

நமது ஞான மேய்ப்பர்கள்!

என் அன்பிற்கினிய பேசாலை உறவுகளே! நாம் வெற்றி அன்னையின் பிள்ளைகள், எமது ஆலையத்தில் நாம் மிகப்பெ ரிய பற்றுதல் கொண்டுள்ளோம். எமது பங்குச் சபை மன்னார் மறைமாவட்டத்தில் நிதிவளம் பெருகிய  ஓர் பங்குச்சபை, இந்த பங்கு சபையிலே நிதி நிர்வாகம் என்பது பெரும் பிரச்ச னைக்குரிய விடயம் தான்.  பங்கு நிதியிலே ஒரு தவறு நட க்கும் போது வெறுமனே பங்கு குருவை குறை சொல்வதும், அவரிடம் காரனம் கேட்பதும் உண்மையில் ஜதார்த்தம் இல்லை. 

                                          ஒருவேளை பங்கு சபை நிதியை ஒருவர் முறைகேடாக பாவித்திருந்தால் அதனை வெளிப்படுத்து தல் ஒரு குருவானவரின் கடமை இல்லை. அவருக்கென்று சில தார்மீக பொறுப்புகள் இருக்கின்றது, அதைவிட பாவங்கள், தவறுகள் இது தொடர்பாக கத்தோலிக்க குருவானவருக்கெ ன்று சில நடமுறைகள் உள்ளன. அதனை நாம் ம‌திக்கவே ண்டும். உதாரணத்திற்கு பங்கு பணத்தை முறைகேடாக பாவி த்த ஒருவர், தனது தவறை தனிப்பட்ட ரீதியில் குருவானவரு க்கு தெரிவித்தால் அது தொடர்பாக குருவானவர் மெளனம் காக்கவேண்டியவராக உள்ளார் என்பதனை மறக்கவே ண்டாம். அதனை அவர் மீறுவாராக இருந்தால் அவர் பாவங்க ளை மன்னிக்கும் ஒரு குருவின்  அதிகாரத்ததை கேள்விக்குறி யாக்குகின்றார். 

                                    எனவே ஒரு பங்கு குருவை மன நோகடிப்பது நல்ல செயல் அல்ல, அப்படியானல் பங்கு நிதி நிர்வாகத்தை எப்படி பரிசீலிப்பது என்ற நடமுறை பிரச்சனை எழுகின்றது அல்லவா? அதற்கு எனது ஆலோசனை,  எமது பங்கிற்கு என்று தனியான ஒரு இணையத்தளம் இருக்கவேண்டும் அதில், நிதி துறைக்கென்று தனியான ஒரு பகுதி அமைக்கப்படவேண்டும், அந்த நிதி துறையை பேசாலை பங்கு மக்கள் மட்டும் பார்வை யிடுவதற்கான ஒரு முறையை அமுல்படுத்தவேண்டும்,  அவ ர்கள் ஏற்கனவே இணைத்தளத்தில் தங்களை பதிவு செய்து அதற்கான இரகசிய குறியீடை பெற்றுக்கொள்ளவேண்டும், நான் இங்கு ஒரு சர்வதேச அமைப்பின்  ஊடகத்துறைக்கு பொறுப்பாக இருந்தவேளை, எமது பங்கு மகன் அமலி வேலா யுதத்தின் மகன் அந்த தொழில் நுட்ப முறையை நோர்வேயில் இயங்கும் ஒரு நிறுவணத்திற்காக செய்திருந்தார் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன், கணனியில் பல வல்லுணர்கள் எமது ஊரிலே இப்போது இருக்கின்றார்கள் அவர்களின் உதவியை நாடலாம்.
                                                                          இணையத்தளத்தின் நிதி துறையில், பங்கு சபைக்கு வரும் அத்தனை வருவாய், செல வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கவேண்டும்,   அதற்கான கேள்விகள் கேட்பதற்கான Feed back முறை அங்கு இருக்க வேண்டும். இதனைவிட்டு பொதுச்சபை கூடி, ஒரு குருவா னவரை நடுவே நிறுத்தி கேள்வி கேட்டு அவமானப்படுத்தல் முறையான செயல் அல்ல, தகவல் அறியும் சட்டப்படி பங்கு மக்களுக்கு பங்கு நிதியில் என்ன நடக்கின்றது என்பதை பங்கு சபை அறிவிக்க க‌டமைப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு தகவல் பரிவர்த்தணை சிறப்பக இருக்குமேயானல், ஊழல், மோசடிகள் என்பன நடக்கவாய்ப்பே இல்லை. மேலும் இணை யத்தளம் ஊடாக கத்தோலிக்க இணைய வானொலி, வத்தி க்கான் வானொலி இவைகளை இணைத்து ஆன்மீகத்தில் முன்னேற முடியும் அதற்கான உதவிகளை நான் எப்பொழும் செய்ய தயாராக உள்ளேன்.
அன்புடன் பேசாலைதாஸ்

fredag 17. november 2017

நினைவில் வந்துபோகும் ஆரோக்கியசாமி துரம் (தொட்டப்பா)

நினைவில் வந்துபோகும் ஆரோக்கியசாமி துரம் (தொட்டப்பா)

ஆரோக்கியசாமி துரம், இவரை தொட்டப்பா என்று ஸ்நாபக அருளப்பர் இளைஞர் மன்ற உறுப்பிணர்கள் செல்லமாக, அழைப்பதுண்டு. நேர்மையன அன்பான மனிதர், எனக்கு ஒருவகையில்  அத்தான் முறை. சமூக ஆர்வலரும் சிறந்த நாடக கதாசிரியரும், இயக்குனரும் ஆவார். நான் நினைக்கி ன்றேன் போர்வாள் என்ற சரித்திர நாடகம் இவருடையது என்று. இவர் ஒரு ஹாஸ்யமான மனிதர், ஸ்நாபக அருளப்பர் மன்றத்தின் யூபிலி விழாவுக்கு எஸ்தார் என்ற நாடகத்தை அவர் அரங்கேற்றினார். அது மிக சுவாரஸ்யமானது! ஸ்நாபக அருளப்பர் மன்ற‌ உறுப்பிணர் எல்லோரும் ஒரு நாள், அவர் வீட்டிற்கு போய் அவரை சந்தித்து, தொட்டப்பா எங்களுக்கு ஒரு நாடகம் எழுதி தாருங்கள் என்றோம் உடனே அவர் நாளை மாலை கோவிலுக்கு நாடகத்தோடு வருகின்றேன் என்றார். 

                                                           சொன்னபடியே வந்தார் கையில்  கொப்பி எதுவும் இல்லை, கொஞ்சம் மப்பு, வந்தவர் நாடகம் ரெடி, நாடகத்தின் பெயர் எஸ்தார் ராணி, நாடக பத்திரங்க ளுக்கு நபர்கள் தெரிவனா ர்கள், எஸ்தர் ராணியாக வேலாயுதம் அன்ரன் தெரிவானர், எஸ்தாரின் காதலான நான் நடிக்க ஒத்துக்கொண்டேன். அன்றைய மாலை இதோடு  முடிந்தது, மறு நாள் மாலை வந்தார் அன்று கூட கையில் கொப்பி இல்லை, ஆனால் எனக்கும், அன்ரனுக்கும் சில பாட்டுக்களும் ராகங்களும் சொல்லித்தந்தார். ஆனால் நாடக கதையை முழுமையாக சொல்லவில்லை. 

                                                                 அடுத்த நாளும் மாலை வந்தார் அப்பொழு தும் கையில் கொப்பி இல்லை. ஆனால் ஒவ்வொரு மாலையில் ஒவ்வொரு காட்சிகளாக சொல்லிவிட்டு, அடுத்த காட்சி எப்படி என்பதை நாளைக்கு சொல்கின்றேன் என சொல்லிவிட்டு போவார். இப்படியே நாடகம் அரங்கேறும் நாளும் வந்துவி ட்டது அப்பொழுது கூட  கதையை முழு மையாக சொல்லவே இல்லை. நாளை நாடகம் அதற்கு முந்திய மாலை தொட்டப்பா ஆரோக்கியசாமி வந்தார். சரி, நாடக முடிவு ரெடி என்றார். கிளைமக்ஸ் இதுதான். என்னைப்பா ர்த்தார் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, தேவதாஸ் நீ உன் படைத்தளபதிகளுடன் காட்டுக்கு வேட்டை யாடப்போ கின்றாய், அங்கு கள்ளு குடிக்கின்றாய், அந்த கள்ளிலே விஷம், நீ சாகின்றாய், அந்த செய்தி எஸ்தருக்கு சொல்லப்ப டுகின்றது. அவளும் அங்கே மயக்கமுற்று விழு கின்றாள் நாடகம் முடிகின்றது என்று சொல்லிவிட்டார். என்ன செய்வது ஏதோ நாடகம் அரங்கே றுகின்ற சந்தோசத்தில் களைந்து சென்றோம். 

                                                            மறுநாள் பரபரப்பு, சில நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது, எங்களுடைய நாடகம் கடைசி நிகழ்வு. நாடகம் அரங்கத்தில்  போய்கொண்டிரு க்கின்றது, தொட்டப்பா ஆரோக்கியசாமி அவர்கள், திரைக்கு பின்னாள் நின்று கொண்டு, வசனம் சொல்லி தந்துகொண்டி ருக்கின்றார். கடைசி காட்சி, காட்டிலே பாசறை காட்சி, தொட்டப்பா அரங்க காட்சியை ஏற்பாடுபண்ணுகின்றார். கங்கானி ஜோன்சனிடம் வேப்பமரத்தில் ஏறி கொப்புகளை வெட்ட சொல்கின்றார், அதற்கு ஜோன்சன் தொட்டப்பா வேப்பமரத்தில், அம்மா இருக்கும்( அம்மை) என்றான், அரை மப்பில் இருந்த, தொட்ட ப்பாவுக்கு கோபம் வந்து துசனத்தில் அம்மாவும்,,,,,,,,,, ஏறுடா மரத்தில் என்றார். நாங்கள் விழுந்து சிரித்தோம். இறுதி காட்சி! நான் விஷம் கலக்கப்பட்ட கள்ளு குடித்து கீழே விழுந்து இறக்கின்றேன்நான் விழுந்தது அரங்கத்தின் முற்பகுதியில், திரையை அம்புறோஸ் ஐயா  மூடுகின்றார், திரை சரியாக எனக்கு மேலாக விழுகின்றது, எனது வலது கையும் காலும் முகமும் பார்வையாளர்களுக்கு நன்றாக தெரிகின்றது. தொட்டப்பா என்னை எழுந்து வரச்சொ ல்கி ன்றார். நான் சொல்கின்றேன் தொட்டப்பா நான் செத்து க்கிடக்கின்றேன் என்று சொல்ல, என்னை வந்து உதைக்கி ன்றார். நான் எழுந்து ஓடுகின்றேன்,  பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றார்கள்,,,,,,என்றும் அன்புடன் பேசாலைதாஸ்

torsdag 9. november 2017

சோக்ரா! chocra!

சோக்ரா! chocra!

பேசாலையில் சோக்ரா என்று சொன்னால் அது லோறன்ஸ் பீரிஸ் அவர்களை அல்லது அவர்களின் பிள்ளைகளை குறிக்கும், இவ ர்களை இன்றும் சிலர் சோக்ரா என்று அழைப்பார்கள். இது இப்பொழுது உள்ள தலைமுறைக்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பு இல்லை. அது என்ன சோக்ரா? என்று சிந்திக்கின்றீர்களா? அதை விபரமாக விளக்க வேண்டும் என்றால் பேசாலையின் கலை வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்க்கவேண்டிவரும், பொறுமை உங்களுக்கு இருக்கின்றதா? அப்படி யானல் இதோ தொடர்கின்றேன்,,,, எமது பேசாலையில் பாரம்பரிய கலைவடிவம் உடக்கு பாஸ் என்பதற்கு மேலாக வாசாப்பு, சரிதை நாடகம், லெம்பவங்கள் இப்படி பல மேடை கலைவடிவங்கள் இருந்தது. என் நினைவுக்கு அருளானந்தர் என்ற நீண்ட சரிதை நாடகத்தை (இரண்டு நாள் நாடகம்) பார்த்து ரசித்து இருக்கின்றேன், அது பற்றி பல சுவாரஸ்யமான‌ சம்பவங்கள் நிறையவே இருக்கின்றன, அதுபற்றி பிரிதொரு சமயம் எழுதுகின்றேன். இப்போது சோக்ரா என்ற விடய த்துக்கு வருகின்றேன்.  
                                                நீண்ட சரிதை நாடகங்கள் அல்லது வாசாப்புகள் மேடை ஏற்றும் போது குறைந்தது இரண்டு நாட்கள் செல்லும், ஊரே கலை விழாவாக காட்சிதரும். இந்த வாசப்புகள் நாடகங்கள் இரவு இரவாக நடைபெறும். ஒரு காட்சி அமைப்புக்கு பின் இன்னொரு காட்சி அமைப்பு ஒழுங்கு செய்ய, தயாரிப்பாளருக்கு நீன்ட நேரம் செல்லும், இரவு நேரம் அல்லவா பார்வையாளர்கள்,  தூங்கிவிடக்கூடாது  என்பதற்காக, அவ ர்களை விழிப்பாக வைத்திருக்க, நகைச்சுவை நேரத்தை ஒதுக்குவார்கள், அந்த நகைச்சுவை காட்சிகளை ஒழுங்கு செய்பவர்தான் இந்த சோக்ரா! எனது தந்தை ஒரு நகைச்சுவை ,கோமாளி நடிகர், இது அவரின் இன்னொ ரு வடிவம் ஆளுமை! இந்த நகைச்சுவைப் பண்பு, அவரின் பிள்ளைகளி டமும் இருப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள், அவர்கள் உழைப்பதி லும், படிப்பதிலும் ஆர்வமுள்ளவர்களாக இருந்தாலும், அவ்வப்போது நகைச்சுவையாளராகவும் இருப்பார்கள். இந்த சோக்ரா என்ற கலைவடி வம், கோமாளித்தனமான காரியங்களை செய்து பார்வையாளைகளை சந்தோசப்படுத்திக்கொண்டு இருப்பார்கள், அவர்களின் உள்ளத்தில் சோகங்கள் நிறைய இருந்தாலும், அதனை வெளிக்க்காட்டாமல், பார்வை யாளர்களை சிரிக்கவைப்பார்கள், உலக புகழ்பெற்ற  சார்ளி சப்ளின், நாடக மேதை சேகஸ்பியர் இவர்கள் எல்லோரும் சோகம் நிறைந்த மனி தர்கள்! இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற சமயம் ஐரோப்பிய மக்கள் இழப்புகளினால் மனம் வாடினின்ர வேளை, சார்ளி சப்ளின் அவர்களை பேசாத நடிப்பினால், நகச்சுவையினால் மீட்டு எடுத்தார்.

                                    சோக்ரா என்றால் ஸ்பானிய மொழியில் வாய் பேசா நகைச்சுவையாளன் என்று பொருள் படும், எனது தந்தைக்கு இந்த பட்டத்தை வழங்கியவர் எமது கோவிலில் கட்டளைக்குருவாக இருந்த பொமிக்கல் சுவாமி அவர்களே எனது தந்தையை அன்பாக சோக்ரா என்று அழைப்பார் அதுவே நாளடைவில் எங்களது பட்டப்பெயராக மாறிவிட்டது. எனது தந்தைதை பெரிய படிப்பாளி அல்ல, பணக்காரரும் அல்ல, ஆனால் அவரைப்பற்றி நிறையவே கதைக்கலாம்,, அது பற்றி தொடரும் எனது பதிவில் எழுதுகின்றேன்,,,,,,,,,,,,

                                                                                       சென்ற பதிவில் சோக்ரா என்ற பட்டப்பெயருக்கு ஒரு விளக்கம் கொடுத்திருந்தேன், இப்பொழுது அந்த சோக்ரா பற்றிய ஒரு முக்கிய விடயத்தை இங்கே கூறவிழைகின்றேன். எமது கோவிலுக்கு முன்பு கட்டளைக்காரர்கள் இருந்தார்கள், கட்டளை க்குருவானவரும் இருந்தார்கள், தற்பொழுது அது மாற்றப்பட்டு பங்கு மக்கள், பங்குகுரு, பங்குச்சபை  இப்படியாகிவிட்டது. கட்டளைகார ர்களாக இருந்தாலும் சரி, பங்குச்சபையாக இருந்தாலும் சரி, கோவில் பணத்தையும் கோவில்  சொத்துக்களையும் அட்டைபோடும் சம்பவங்கள் பல நடந்துள்ளன, நடந்துகொண்டிருப்பதாக்வும் கேள்வி? தற்பொழுது மன்னார் நகரிலே கம்பீரமாக  சிரித்துக்கொண்டிருக்கின்றதே வெற்றி நாயகி கட்டிடம், அந்த கட்டிடம் எழும்புவதற்கு முன்பு அங்கே பேக்கரி ஒன்று இருந்தது. அந்த பேக்கரியை சோக்ரா எனும் என் தகப்பனார்தான் நடத்தி வந்தார். எனது தகப்பனார்  பாண் கேக் இன்னும் பல சாப்பாடு களை செய்வதில் கைதேர்ந்தவர். கும்பா கேக் என்ற ஒரு பாரம்பரிய த்தை எனது தகப்பனார்தான் அறிமுகம் செய்துவைத்தவர். இந்த பேக்கரியை தனது சொத்தாக மாற்றுவதற்கு செவாலியர் வேதம் பல்தானோ அரும்பாடுபட்டார். அதற்காக தனது மகனை வக்கீலுக்கு கூட படிக்கவைத்தார். பெரும் பணக்காரர், சேவாலியர் இதனால் அவரை எதிர்க்க கட்டளை குருவுக்கோ, அப்போதுள்ள கட்டளைகாரர்களுக்கு தைரியம் இல்லை, இருந்தபோதும் எனது தகப்பானார் விட்டபா டில்லை.தனியொருவனாக தனித்தே எதிர்த்தார். அந்த பேக்கரியும் காணியும் மாதாவுக்கே சொந்தம் என்று போராடினார். அவரது உழைப்பு முழுவதும் கோட்டுக்கும், பொலிஸுக்குமாக கரைந்ததுதான் மிச்சம்! இதனால் எங்கள் தக‌ப்பன் எங்களது படிப்பில் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டவில்லை. நிலமை இப்படியாக இருந்தவேளையில் தான், பேசாலைக்கு பொன்னையா சுவாமி வந்தார். பேசாலையில் பெரும் புரட்சி நடந்தது! புரட்சிகரமான புனித ஸ்நாப அருளப்பர் மன்றம் உருவானது, கூடவே சிங்கராயர் எனும் ஒரு சிங்கம் உதவிக்குருவாக இருந்தார். புனித ஸ்நாபக அருளப்பர்  மன்ற இளையோரின் உதவியுடன் பொன்னையா சுவாமி, மன்னார் பேக்கரி விவகாரத்தை கையில் எடுத்தார். வெற்றியும் பெற்றார். அப்பொழுது அத்திவாரமாக இருந்து சோக்ரா அழுதார், இப்பொழுது கட்டிடம் ஜொலிக்கின்றது. எனது வெற்றி அன்னையும் மனமகிழ்ந்தாள், சோக்ராவின் முயற்ச்சி,  அன்னையின் ஆசியாக அவரது ஆண் வாரிசுகளுக்கும், அவர்களது பிள்ளைகளையும் வந்தடைந்தது.  அவரது பிள்ளைகள் பட்டதாரிகளாகவும், அவர்து பேரப்பிள்ளைகள் டாக்டர்களாகவும் , பொறியியலாளராகவும், விமான பொறியியலாளராகவும், வங்கி முகாமையாளராகவும், சிறந்த மொழிபெயர்ப்பு வல்லுநணர்களாகவும், ஐரோப்பிய‌ மண்ணிலே வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்! சோக்ராவின்  வாழ்வில் நடந்த பல முக்கிய பதிவுகளுடன் மீண்டும் உங்களை அடுத்த பதிவிலே சந்திக்கின்றேன். அன்புடன் உங்கள் அன்பு பேசாலைதாஸ்

சோக்ரா என்ற லோறன்ஸ் பீரிஸ்,,,,,

சென்ற பதிவிலே மன்னார் வெற்றி நாயகி கட்டிட காணி சம்பந்தமாக சோக்ராவின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டியிரு ந்தேன், இப்பொழுது சோக்ராவின் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தை பதியவிட ஆவலாக இருக்கின்றேன். மன்னார் பஸ் டிப்போவில் இருந்து, தலைமன்னார் நோக்கி பிற்பகல் மூன்று மணிக்கு செல்லவிருந்த பேருந்து, அன்று நாற்பத்தைந்து நிமிடம் தாமதாமாக புறப்பட்டது. அந்த பேருந்தில் சோக்ரா அவர்கள், தனது கேக், பாண், பனிஸ் பெட்டிகளை ஏற்றிக்கொன்டு தானும் புறப்பட்டார். ஏற்கனவே தாமதமாக புறப்பட்டதால், பேருந்தின் சாரதி படுவேகமாக பேருந்தை செலுத்திக்கொண்டிருந்தார். எருக்கலம்பிட்டியை அண்மித்துவிட்டது, ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அவளது பத்து வயது பையனும், பேருந்தில் ஏறுவதற்காக,  தரிப்பிடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். பத்து வயது பையன் ஓடிவந்து,  பேருந்தில் ஏறிக்கொண்டு, ஓடி வாங்க அம்மா என்று கத்திக்கொண்டிருந்தான், பாவம் அந்த கர்ப்பிணிப்பெண் என்ன செய்வாள்? மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தாள். அதனை பொறுக்க முடியாத பேருந்து நடத்துணர், வண்டியில் ஏறிய சிறுவனை இறக்கிவிட்டு, பிஸிலை ஊத, சாரதி விருட்டென்று வண்டியை வேகமாக ஓட்டினார். இதனை பார்த்த சோக்ராவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சாரதியோடும் பஸ் நடத்துணரோடும் வாய்த்தர்க்கம் செய்தார். சோக்ராவின் தர்க்கத்தை காதில் வாங்கிக்கொள்ளாமல் சாரதி பஸ்ஸை ஓட்டிக்கொண்டிருந்தார். சோக்ராவும் ஏனோ அமைதியாகிவிட்டார், இப்பொழுது பஸ் கரிசலைதாண்டிவிட்டது, திடிரென்று சோக்ரா எழுத்து உடனே பஸ்ஸை நிறுத்தும்படியும், தனக்கு மூத்திரம் வருகின்றது அடக்கமுடியவில்லை பஸ்ஸை நிற்பாட்டுங்கள் என்று கத்த, பஸ் வண்டி நிறுத்தப்பட்டது. சோக்ரா அவசர அவசரமாக் கீழே இறங்கி, அருகில் இருந்த ஈச்சை பற்றைக்குள் மறைந்து கொண்டார், அரைமணி நேரம் சென்றும் ஈச்சை பற்றையை விட்டு சோக்ரா வெளியே வரவேயில்லை. ஏற்கனவே பஸ் தாமதாமாகிவிட்ட படியால் பயணிகள் குழும்பிவிட்டார்கள். பின்பு சோக்ரா ஆறுதலாக வெளியே வந்து பஸ்ஸில் ஏறிக்கொண்டார். ஒரு கர்ப்பிணிப்பெண்ணை ஏற்ற ஐந்து நிமிடம் உங்களால் பொறுக்க முடியவில்லை, இப்பொழுது அரை மணித்தியாலம் வீணாக்கிவிட்டீர்களே! எனக்கு மூத்திரம் வரவில்லை உங்கள் செயலை கண்டு ஆத்திரம் தான் வந்தது என்று, பணிகளோ சாரதியோ யாரும் ஒன்றுமே சொல்லவில்லை, சோக்ராவின் செயலில் மனிதாபிமானம், நியாயம் இருப்பதை எல்லோரும் உணர்ந்து மெளனமானர்கள். யாரோ ஒரு கர்ப்பிணி பெண்ணுக்காக வாதடியவர்தான் இந்த சோக்ரா,,,,எவன் ஒருவன் அநீதியை கண்டு ஆத்திரப்படுகின்றானோ அவன் என் தோழன் என்றான் சேகுவேரா,,,, அன்புடன் உங்கள் அருமை பேசாலைதாஸ்


சோக்ரா வெற்றி அன்னையின் ஆசீர் பெற்றவன்!


சோக்ரா என்னும் பதிவில், சோக்ரா மன்னார் வெற்றிநாயகி கட்டிட க்காணி சம்பந்தமாக சோக்ராவின் தனிமனித போராட்டத்தையும், அதன் விளைவாக வெற்றி அன்னையின் அருளை பெற்றுக்கொண்ட விடயம் தொடர்பாக பதிவு செய்திருந்தேன், அந்த அன்னையின் அருளை எனது சொந்த வாழ்வில் உணர்ந்து மெய் சிலிர்த்த ஒரு சம்பவத்தை உங்களோடு பகிரலாம் என என் உள்மன உணர்வு தூண்டுகின்றது. எமது பேசாலை மக்கள் எல்லோரும் மண்டப முகாமில் இருந்தவேளை, இந்தி யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பொருட்களை ஏற்றி இறக்கி வியா பாரம்  செய்து கொண்டிருந்தார்கள்.
                                                                                     ஒரு முறை எனது கடைசி தம்பி சுவக்கின், செல்வம் மற்றும் பிலிப்பண்ணன் எல்லோரும் பேசாலையில் இருந்து வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது, பொருட்களை மொத்த மாக வாங்கும் மண்டபத்து ஆறுமுகத்தோடு நான் அந்த இரவு இராமே ஸ்வரத்தில் நிற்கின்றேன், அதிகாலை நான்கு மணிக்கு பேசாலையில் இருந்து சில போட்கள் வந்தன, அப்பொழுது ஒரு பேரதிர்ச்சி செய்தி எனக்கு கிடைத்தது அதாவது கடலில் நேவிக்காரன் பீரங்கியால் சுட்டதா கவும் அதில் சுவக்கினின் போட் சிக்கிக்கொண்டதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது, எனக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது, ஒன்றுமே புரியவில்லை ஓவென்று கதறி அழுகின்றேன், நிலைமையை புரிந்து கொண்ட ஆறுமுகம் டக்கென்று சாராயபோத்தலை திறந்து அப்படியே எனது தொண்டையில் ஊற்றுகின்றான் அதுதான் எனது முதல் அனுபவம், கொஞ்சம் வெறி தலைக்கேறுகின்றது, பிலிப்பண்ணனின் தகவலை திண்டுக்கலில் இருக்கும் எனது அண்ணிக்கு சொல்வதற்காக, விடிய ற்காலை நாகை செல்லும் கடுகதியில் ஏறிக்கொண்டேன், பஸ் நாகபட்ட ண‌த்தில் நின்றுவிட்டது, நான் அன்னைவேளாங்கன்னி ஆலயம் செல்கி ன்றேன், முகப்பு மண்டபத்தில் ஒரு தேவவசனம் *அன்னையின் பிள்ளை கள் அவலமாய்ச் சாகமாட்டார்கள் என்பதே அந்த வசனம்! எனக்கு ஆறுதலாக இருந்தது, ஆம் நாங்கள் வெற்றி அன்னையின் பிள்ளைகள் என்பதை எனது மனம் ஆயிரம்தடவை உச்சரித்து க்கொண்டது.  
                                                                            திண்டுக்கலுக்கு பஸ் எடுத்து அங்கே சென்றேன் எனக்கு அங்கே ஆச்சரியம் காத்திருந்தது,  இறந்திருப்பரோ என்று நினைத்த பிலிப்பண்ணன் அங்கே நிற்கின்றார். நடந்த நிகழ்வு களை விபரிக்கின்றார். நேவிக்காரன் பீரங்கியால் சுட்டதும்  போட்டின் முற்பகுதியில் தான் சேதம் ஏற்பட்டது உடனே இயந்திரத்தை நிறுத்தி விட்டு இருட்டிலே அப்படியே நின்றுவிட்டோம் , சுவக்கின் கடலில் பாய்ந்துவிட்டான் அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியாது, நான் இன்னொரு படகு மூலமாக இராமேஸ்வரம் வந்து சேது எக்ஸ்பிரஸ் மூலாமாக இங்கு வந்துவிட்டேன் என்றார், மனதுக்கு ஒரு ஆறுதல் ஆனாலும் சுவக்கினின் கவலை தொட்டுக்கொண்டது, இப்போது நான் மண்டபம் நோக்கி புறப்படுகின்றேன், அங்கே நான் போய்ச்சேர்ந்ததும் நல்லதோர் செய்தி எனக்கு கிடைத்தது, அதாவது கடலில் பாய்ந்த சுவக்கின் தலைமன்னார் கரை ஒதுங்கினான் என்பதே அந்த நல்ல செய்தி, அன்னையின் அருட்கரம் பேசாலை மக்களை பல இன்னல்களில் இருந்து காப்பாற்றி உள்ளது, பேசாலை ஆலையத்தில் நடந்த குண்டு தாக்குதல் நல்லதோர் புதுமையான சம்பவம் என்பதை என் ஊர்மக்கள் அறிவார்கள்! அன்னையின் பிள்ளைகளாக என்றும் சுகமாக பாதுகாப்பாக நாம் எல்லோரும் வாழ்வோம்  அன்புடன் பேசாலைதாஸ்

சோக்ரா (லோறன்ஸ் பீரிஸ்),,,,,,,,, சோக்ரா அல்ல சோக்ரட்டீஸ்!



சென்ற சில பதிவுகளில் சோக்ரா பற்றிய அனுபவ குறிப்புகளை பதியவிட்டேன். இன்னும் சில குறிப்புகளை உங்கள் பார்வைக்கு பதியவிடுகின்றேன். சோக்ரா வயோதிப காலம் வந்தபோது, தன்னிச்சையாக வாழ்த்தலைப்பட்டார். தான் உழைப்பதை தானே அனுபவித்துக்கொண்டு, குடித்துக்கொண்டும் வாழ் நாளின் இறுதிப்பாகத்தை கழித்தார். யாராவது என்ன லோறன்ஸ் குடித்துக்கொண்டு திரிகின்றாயே என்று கேட்டால் போதும்,,,, எனக்கு என்ன கவலை, எட்டு சிங்கங்களையும், ஒரு இராசாத்தியையும் பெற்றேன், எனக்கென்ன கவலை போய்ப்படுங்கடா,, என்று வெகு அலட்சியமாக பேசுவார். தான் பெற்ற ஆண்பிள்ளைகள் வாழ்வில் போராடி முன்னுக்கு வருவார்கள் என்பதில் அவருக்கு அசைக்கமுடியா நம்பிக்கையும், வெற்றி அன்னையின் தைரியமும் அவருக்கு இருந்தபடியால், தன் உடல் நிலையை கவனிக்காமல் குடியில் காலத்தை கழித்தார். மது போதையில் இருக்கும் போது, அவர்  பாட்டுபாடுவார், வசனம் பேசுவார். தந்து சரணகொட, துந்துக்கவால,, துந்து சரணகொட இப்படி ஏதோ சிங்கள மொழி பாடலை பாடிவிட்டு வசனம் பேசுவார் " எண்ணிய எண்ணம் எங்கே? இலக்கண குமாரன் எங்கே? கன்னனும் தேரும் எங்கே? கண் கொள்ளாப்  படைகள் எங்கே? எங்கே? என்று கேட்டு தெருவில் போவோர் வருவோரிடம் கேள்வி கேட்பார். எதுவுமே நிரந்தரம் இல்லை. கேள்விகள் மட்டுமே நிரந்தரம் என்று சொல்லுவார். இப்போது நினைத்தால் கூட சோக்ரா அல்ல சோக்ரட்டீஸ் ஞாபகத்துக்கு வரும்! மகாபாரதப்போரிலே, வீழ்ந்து கிடக்கும் துரியோதனனைப்பார்த்து, கிருஸ்ணர் கேட்கும் கேள்விகளைத்தான் சோக்ரா அந்த காலத்தில் கேட்டார்? நாடோடியாக இலங்கை எங்கும் அலைந்து திரிந்ததினால் சோக்ராவுக்கு சிங்களம் நன்றாக பேசவரும், ஆனால் இலக்கிய ஆர்வம் எங்கிருந்து வந்தது என்று எனக்கு புரியவில்லை. சோக்ரா தன் சின்ன வயதில் தாய் தக‌ப்பனை இழுந்து, அண்ணன் எலியாஸ் பீரிஸ் அவர்களின் கண்கானிப்பில் இருந்தபடியால் இறுதிவரை எதிலும் பற்று அற்றவராக வாழ்ந்து மடிந்தார். அன்புடன் பேசாலைதாஸ்

søndag 22. oktober 2017

கோச்சு வண்டியும் அப்புகாமியும்!

கோச்சு வண்டியும் அப்புகாமியும்!

அப்புகாமி பெயர்தான் சிங்களம் ஆனால் சிங்களம் தெரியாத தமிழ் மட்டும் பேசும் கரையோரச்சிங்கள சமூகம் சார்ந்தவர், எனது ஊருக்கு பருவகால இடம்பெயர்ந்து மீன்பிடி க்கும், சிலாபம் புத்தளம் நீர்கொ ழும்பு, வென்னப்புவா இப்படிப்ப ட்ட இடங்களில் இருந்து மீன்பிடிப்ப தற்காக வருவார்கள், பின்னர் பருவ காலம் முடிந்ததும் வள்ளம் வலைகளோடு சார சாரையாக அவரவர் இடங்களுக்கு சென்றுவிடு வார்கள், ஒரு சிலர் தொடர்ந்தும் என் கிராமத்தில் தங்கி எங்களில் ஒருவராக மாறிப்போவார்கள், அப்படி மனம் மாறி இதயத்தால்  என் ஊரோடு சங்கமமானது அப்புகாமியின் குடும்பம், 1964 ஆண்டு வீசிய புயலில் அப்புகாமியின் அப்பா காணாமல் கடலில் தொலைந்தவர்தான்! அதன் பின் அப்புகாமியின் அம்மா இடிய ப்பம் விற்றுத்தான் வறுமையோடு போராடினார்கள். அப்புகம்மையின் அம்மா, அக்கா, அவரது பெரியதாய் இவர்கள் எல்லோரையும் நாங்கள், நோனா அக்கா என்றுதான் செல்லமாக அழைப்போம், நோனாக்களின் இடியப்பம் அதைவிட நோனாக்கா செய்யும் சம்பல் தனிச்சுவை,  அப்பு காமியும் நானும் பள்ளித்தோழர்கள், இன்றும் இணைபியா நணபர்கள், என்னிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை அன்பைத்தவிர, ஒரு முறை துரம் மாஸ்டர் நிராவியால் புகையிரத இஞ்ஜின் இயங்குகிறது, அந்த நீராவி இயந்திரத்தை கண்டு பிடித்தவர் ஜேம்ஸ் ஸ்டீவன்சன் என்று எங்களுக்கு சொன்னார், அந்த நாள் சொல்லிவைத்தது போல என் கிராம த்துக்கு கரிக்கோச்சு வந்தது, நானும் அப்புகாமியும் அந்த கரிக்கோச்சை ஆவலோடு பார்க்கின்றோம் ஏதோ ஒரு மெக்கனிக் போல கீழே குனிந்தெ ல்லாம் அப்புகாமி ஆரச்சிபண்ணுகின்றான். கரிக்கோச்சியும் போய்வி ட்டது, அப்புகாமிக்கு ஒரு ஐடியா வந்தது அடே மச்சான் நாமும் சின்ன தாய் ஒரு கரிக்கோச்சி செய்துதால் என்ன என்றான். நானும் ஆமோதி த்தேன். திட்டம் தயாரானது. முதலில்பெரிய லக்ஸ்பிரே டின்னில் தண்ணீர் ஊற்றி அதை நன்றாக ஈயத்தால் ஒட்டி அடத்தோம், சிறிய வண்டியும் தயாரானது. இப்போது அதனை இயக்கவேண்டும்,  அப்பொ ழுது எனது வீட்டுக்கு முன்பாக  வி ஜீ டயஸ் அவர்களின் மீன்வாடியும் அதற்கு பின்னால் ஒரு கிணறும் இருந்தது. (இப்போது தேவராஜ் வீடுக ட்டும் இடம்) அந்த கிணற்றடியில் தான் நாங்கள் கோச்சுவிட தயாரா னோம். குளிக்கவந்தவர்கள், தண்ணிற் மெண்டுகொண்டு போக வந்த வர்கள் எல்லோரும் கூட்டமாக கூடிவிட்டார்கள். நான் பெருமையாக சொன்னேன் இடோ பாருங்கள் இந்த வண்டி மெதுவாக நகரும் என்று சொல்லி, வண்டியில் உள்ள நெருப்பை ஊதுகின்றேன். உடனே அப்பு காமியின் அக்கா சின்ன நோனா, நான் ஊதுகின்றேன் என்று சொல்லி ஒரு ஊது குழலோடு வந்து நெருப்பை ஊதுகின்றாள், அடுத்தது என்ன நடக்கப்போகின்றது என்பதில் எல்லோருக்கும் ஆவல், சனம் கூட்டமாக் நெருங்கிவிட்டார்கள், நோனா நன்றாக‌ ஆர்வமாக் ஊதுகின்றாள், நானும் இன்னும் நல்ல என்று  ஊக்குவிக்கின்றேன். திடீரென்று பாரிய சத்த த்தோடு லக்ஸ்பிறே டின் வெடிக்க, சுடுதண்ணி எல்லோர்மீதும் பட, சனம் செய்வதறியாது விழுந்தடித்து ஓடினார்கள். கடைசியில் நோனா அக்கா ஆஸ்பத்திரியில், நானும் அப்புகாமியும் காட்டுக்குள் தலைமறவு.
எங்களின் விசித்திரமான ஆராய்ச்சி இப்படி சோகத்தில் முடியும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. அந்த நாளை இன்னமும் சிந்தித்துப்பா ர்க்கின்றேன். அன்புடன் பேசாலைதாஸ்

fredag 20. oktober 2017

டிக் டிக் டிக் என்று கையும் ,டக் டக் டக் என்று இதயமும்,,,,,,,,,,,

டிக் டிக் டிக் என்று கையும் ,டக் டக் டக் என்று இதயமும்,,,,,,,,,,,

உலகத்தமிழர் பேரவைத்தலைவர் அருட்திரு இம்மனுவேல் அடிகளாரின் இலங்கை விஜயம் குறித்து தமிழ் மக்களிடையே கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எனது பதிவை இங்கே எழுதுகின்றேன்.
முள்ளிவாய்க்காலில் கடுமையன போர் நடந்து கொண்டிருக்கின்றது, மே 18 திகதி பிரபாகன் இறந்துவிட்ட அரசு செய்தியுடன் போர் முடிவுக்கு வருகின்றது அதற்கு முன்னைய நாள் நோர்வேயின் தேசிய நாள் மே 17, நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பிரமாண்டமான பேரணி தமிழ் மக்களினால் முன்னெடுக்கப்படுகின்றது, அதற்கு உரையாற்ற அருட்தந்தை அவர்கள் ஓஸ்லோ வந்திருந்தார். அவரோடு அன்று போராட்ட நிகழ்வுகள் குறித்து நீண்ட நேரம் அவரோடு உரையாடினேன். அப்போது அருட்தந்தையின் உணர்வுகளை என்னால் துள்ளியமாக எடைபோட முடிந்தது. தேசியதலைவரின் கணிப்புக்கும், அவரின் மரியாதைக்கும் இன்றும் என்றும் அருட்தந்தை அவர்கள் உரித்தானவர் தான். அருட்தந்தை அவர்களை இலங்கை நாட்டுக்கு விஜயம் செய்வதை இலங்கை அரசு தடை செய்தது, ஏன் இந்தியா கூட அவரின் இந்திய விஜயத்தில் குறுக்கிட்டது.  இப்படிப்பட்ட ஒருவர் இன்று கொழும்பில் இலங்கை அரசு மற்றும் அமெரிக்க தூதுவர்களோடு கைகுலுக்கி  பேசுகின்றார் என்றால் இதன் பிற்புலத்தில் ஏதோ ஒரு நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது என்பது மட்டும் உறுதியாகின்றது. இலங்கை அரசியல் வரலாற்றை உற்றுநோக்கினால், சிங்கள பெளத்த மத பிரிவேனாக்களின் ஆதரவோடு தான் இலங்கை அரசாங்கம் இயங்கிக்கொண்டு இருக்கின்றது. இலங்கையின் தேசியவாத உணர்வு, மாகாவம்ச போதனையுடன் சிங்கள இனவெறியாக உருமாற்றப்பட்டுள்ளது. நாம் இலங்கையர் என்ற தேசிய உணர்வு எவரிடமும் இல்லை அது வளர்த்து எடுக்கப்படவும் இல்லை. பெளத்த மத தலைவர்களை எதிர்த்து, இலங்கையின் தேசிய நலனை முன்னெடுக்க எவரும் துணியவில்லை அதற்கான ஆளுமையும் அருகதையும் சிங்கள அரசியல்வாதிகளிட‌ம் இல்லை. இருக்கப்போவதும் இல்லை. இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டுமென்றால் அது சிங்கள பெளத்த மத பீடத்தின் மனமாற்றதிலும், சிங்கள மக்கள் மீது ஏற்படும் ஒற்றுமை விழிப்புணர்விலுமே தங்கியுள்ளது.  ஆயுத போராட்டம் தமிழ் மக்களிடம் சிங்கள அரசினால் திணிக்கப்பட்டது என்ற மாபெரும் உண்மையை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவைக்கவேண்டும். அதுமட்டுமல்ல, போர் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய குற்றச்செயல்கள் இழைக்கப்பட்டுள்ளன அதன் விழைவாக தமிழ் மக்கள் கடுந்துயர் அடைந்த கதை சிங்கள மக்களின் காதுகளுக்கு சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை. போர்குற்றம் பற்றிய விழிப்புணர்வு சிங்கள மக்களிடையே விதைக்கப்படவேண்டும் என்று அருட்தந்தை கொழும்பில் கூறியதை இங்கு மீண்டும் கோடிட்டு காட்டவிரும்புகின்றேன். சிங்கள மதபீடத்தின் கடும் போக்கில் இருந்து அது இறங்கிவரவேண்டும் அவ்வாறு வருவதன் ஊடாகவே இனப்பிரச்சினை தீர்வில் காத்திரமான முன் எடுப்புகள் சத்தியமாகும். கடும் போக்கில் இருந்து பெளத்த மதபீடம் இறங்கி வரவேண்டுமானல் அதற்கான சமிஞ்சைகளை தமிழ் தரப்பிலும் முன்னெடுக்கப்படவேண்டும்.அந்த வகையில் தமிழ் இனப்பிரச்சனையில் கத்தோலிக்க கிறிஸ்தவ அருட்குருக்கள் தன்னுயிரை தியாகம் செய்திருக்கின்றார்கள்.அருட்திரு இம்மானுவேல் அடிகளார் முன்னோடியாக இருப்பது யாவரும் அறிந்த விடயம். அவ்வாறு இருக்கையில், தமிழ் தரப்பு சாதாகமாக மத தலைவர்கள் சற்று இறங்கிவந்து நல்லெண்ண சமிக்ஞைகளை முன்னெடுப்பது அவசியமாகின்றது, அதனையே சர்வ தேச‌ சமூகமும் எதிர்பார்க்கின்றது. அதனை கருத்தில் கொண்டு அருட்குருவானவருக்கு  கத்தோலிக்க உயர் பிடமான வத்திக்கான் ஊடாக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதை தமிழ் ஊடகங்கள் உணர்ந்துள்ளார்களா? என்பது கேள்விக்குறியாகவுள்ளது. மற்றப்படி தேசியதலைவரின் கடிகாரம் அருட்குரு இம்மானுவேல் அவர்களின் இடது கையில் டிக் டிக் டிக் என்று அடிதுக்கொண்டுதான் இருக்கிறது, கூடவே அவரின் இதயமும் டக் டக் டக் என்று தமிழுக்காகா அடித்துக்கொண்டுதான் இருக்கின்றது அன்புடன் பேசாலைதாஸ்

torsdag 19. oktober 2017

என் நினைவில் நிற்கும் ஆசிரியை!

என் நினைவில் நிற்கும் ஆசிரியை!

என் பள்ளி வாழ்வில் பல ஆசிரியர்களை என்னால் மறக்கமுடிவதில்லை அவர்களிள் ஒருவர் தான் திருமதி ஜெகநாதன் ஆசிரியை, அவரின் கணவர் பேசாலை டின் மீன் தொழிற்சாலையின் முகாமையாளாராக  பணிபுரிந்தவர்.  ஜெகநாதன் ஆசிரியை பேசாலைக்கு வந்தபின்புதான் வெற்றித்தாயின் அனுக்கிரகத்தால் ஒரு ஆண் மகனை பெற்றெடுத்தாள்! அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், வெற்றி அன்னையின் அருளால் தான் ஒரு மகனை பெற்றெடுத்ததாக அவரே கூறுவதுண்டு.  ஜெகநாதன் ஆசிரியர் மிகவும் கண்டிப்பான ஆசிரியர் அதேவேளை ஒரு தாய்க்குரிய கருனை அவரிடம்  எப்பொழுதும் உண்டு.தன் மாணக்கர்கள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்று அறிவுறை கூறுவதுண்டு. அவர் தந்த ஊக்கமே எனக்கு லண்டன் புறுனல் பல்கலைக்கழகத்தில்  M.A  பட்டம் படிக்கவேண்டும் என்ற உந்துதலை எனக்கு அளித்தது என்றால் அது மிகையாகது! ஜெகநாதன் ஆசிரியை பார்க்கும் போதெல்லாம் மஞ்சள் குங்குமம் பொங்கும்  மகா லட்சுமியை நினைவுக்கு கொண்டுவரும்.  அவர் எங்களுக்கு தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் படிப்பிக்கும் பாங்கு மிக நேர்த்தியானது. ஒருபோதும் பிரம்பை கையில் தொட்டதே இல்லை ஆனால் டீச்சர் பார்க்கும் ஒரு பார்வையே போதும், மாணவர்களுக்கு உள்ளூர வியர்த்து கொட்டும். எவ்வளவுதான் கண்டிப்பாக இருந்தாலும், அவ்வப்போது நகைச்சுவையாக எங்களோடு உரையாடுவதுண்டு. எங்கள் வகுப்பிலே சகாயன் சில்வா என்ற குறும்புக்கார மாணவர் இருந்தார். அடிக்கடி ஏதாவது ஆங்கில வசனத்தை எடுத்துவிடுவான் அதற்கு உரிய அர்த்தம் அவனுக்கே தெரியாது. ஒரு முறை சகாயன் சில்வா, எமது சக மாணவியான மிரியம் குருஸுடன் வாய்த்தர்க்கம் செய்தான் அப்பொழுது திடீரென்று  I don't care   என்று ஒரு ஆங்கில வசனத்தை எடுத்துவிட்டான்.அப்பொழுது  நண்பி மிரியம் அப்படியென்றால் என்ன அர்த்தம் என்று சகாயன் சில்வாவிடம் கேட்ட பொழுது அவன் மிகச் சர்வ சாதாரணமாக  நான் ஒரு சாதாரண மனிதன் என்று சொன்னான். அவன் சொன்னதை நாங்களும் நம்பிவிட்டோம், அதே நேரம் பார்த்து வகுப்பறைக்குள் நுழைந்த ஜெகநாதன் டீச்சர் சாகயன் சில்வாவிடம் I don't care என்றால் அதன் அர்த்தம், நான் பொருட்படுத்தவில்லை என்று விளக்கம் கொடுக்க, உடனே சகாயன் சில்வா அதைத்தான் டீச்சர் நான் ஆங்கிலத்தில் சொன்னேன் என்று டக்கென்று பதில் சொன்னதும் டீச்சர் உட்பட நாங்கள் அனைவரும் குழுங்கி குழுங்கிச் சிரித்தோம்.
பள்ளி வாழ்க்கையே வண்ணமயமான கனவுக்கலவைதான்! அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

அந்த நாள்!

அன்பர்களே! நம் ஒவ்வொருவருக்கும் பள்ளிப்பருவ வாழ்க்கையை நினைக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு ஏக்கம் மனதுக்குள் குடி கொள்ளும் அந்தக்காலம் திரும்பவராதா! என்ற அந்த ஏக்கம் தான் அது! நான் என் கிராமத்தை விட்டு 1978 ஆண்டில் இருந்தே பிரிந்துவிட்டேன், குருமடவாழ்வு, பல்லகலைக்கழக வாழ்வு, பின்னர் இந்தியாவில் சில வருடங்கள் அஞ்ஞாத வாசம் ( ஒரு போராளியாக) பின்னர் ஐரோப்பிய புலம் பெயர்வு, இப்படியே வாழ்க்கை அலைக்கழிந்துவிட்டது! இருந்தாலும் என் கிராமத்தின் நினைவுகள் இப்பவும் பசுமரத்தாணி போல மனதில்,,,,, இப்போது இருக்கும் கிராமம் என் மனப்பதிவில் இல்லை, இருப்பதெல்லாம் 1978 ஆண்டுகளுக்கு முன்பிருந்த என் கிராமத்து பதிவுகளைகளைத்தான் இப்பவும் நான் மீட்டிக்கொண்டிருக்கின்றேன். ஆலமரங்கள் இருக்கும், ஊஞ்சலாடிக்கழிக்க நீள விழுதுகள் தொங்கும், அருகிலே குட்டைக்குளம் இருக்கும், அதிலே பனைமரக்குற்றிகளை கப்பல் என நினைத்து அதில் ஏறிக்குதிக்கும் சின்னஞ்சிறார்கள், ட்ரெக்டர் வண்டியாய், கத்தாளை, அயலை என ஏரளமாய் மீன் பாயும் என் அழகான ஊர் இப்போது இல்லை. அப்போது உறவுக்காய் வாழ்ந்த உள்ளங்கள் இப்போது இல்லை, இப்போது இருப்பதெல்லாம் வரட்டு கெளரவமும் ஏளனம் கலந்த உள்ளங்கள் நிறையவே என் ஊரில் உண்டு, அந்த ஓலங்கள் இப்போது எதற்கு? விசயத்துக்கு வருகின்றேன். என் பள்ளி வாழ்க்கையில் எனக்கு ஓணான் பல்லி கிளிக்குஞ்சு அணில் குஞ்சு இவைகளில் அலாதி ஆசை, மற்ற நண்பர்கள் இந்திய சாரம் சரசரக்க தெருவெல்லாம் பருவங்களை சுற்றிய காலத்தில், இப்படி நான்!
அப்போ நான் ஒரு லூசுதானே! இருக்கட்டும், அணில் குஞ்சு பிடிக்க பள்ளிக்குட ஆலமரதின் கீழ் முட்டி வைத்து தேங்காய் சொட்டு, மிளகாய் வாட்டி அத்ற்குள் வைத்திருந்தேன். அதனை காக்கா கஸ்பார் பார்த்துவிட்டான்! மணி அடித்ததுதான் தாமதம் கஸபர் ஓடினான் என்முட்டியை எடுப்பதற்கு, முட்டியும் கவிழ்ந்து இருந்தது, நான் காக்கா கஸபாரை துரத்துகின்றேன். களைப்பாய் ஓடிய கஸ்பார் ஒரே மூச்சில் முட்டிக்குள் கைவிட்டு இழுத்தான் ஒரு பெரிய பாம்பு அவன் கையில்! நல்ல காலம் பாம்பு அவனை தீன்டவில்லை, அப்படி நடந்திரிந்தால் காக்க கஸப்பார் அமரர் கஸ்பாராகி 45 வருடங்கள் கழிந்திருக்கும், நினைக்க இப்பவும் அலாதி ஆனந்தம் தான் அன்புடன் பேசாலைதாஸ்

tirsdag 16. mai 2017

எமது பாடசாலையில் அன்னையர் தினத்தை நினைவு கூர்ந்து அதிபர்,ஆசிரியர் மாணவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட கவிதைகள்

எமது பாடசாலையில் அன்னையர் தினத்தை நினைவு கூர்ந்து அதிபர்,ஆசிரியர் மாணவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட கவிதைகள்

அம்மா
இன்னுமொரு பிறவி இருக்குமேயானால்
என் தாயின் செருப்பாகப் பிறப்பேன்.
தேய்வதற்காகவல்ல என்னைச் சுமந்தவளை
ஒரு முறையேனும் சுமப்பதற்காக.....
சொர்க்கம்
தாயின் கருவறையை பார்த்தபின்பு முடிவுக்கு வந்து விட்டேன் இருட்டாய் இருப்பது நரகம் மட்டுமல்ல சொர்க்கமும்தான்
புரண்டு படுத்தால் நாம் இறந்து விடுவோமோ என்று கருவில் இருந்த நமக்காக தூக்கத்தை கூட தொலைத்து விட்டு இரவில் விழித்திருந்த சூரியன் ... ......அம்மா
அம்மாவுக்கென்று தனியாக கவிதை வேண்டாம் அன்பாகப்பழகிப்பார் அம்மாவே கவிதைதான்
உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தந்த தெய்வம்
அம்மா........
உயிர் எழுத்தில் அ எடுத்து
மெய் எழுத்தில் ம் எடுத்து
உயிர்மெய் எழுத்தில் மா எடுத்து
அழகு தமிழில் கோர்த்தெடுத்த முத்து அம்மா

søndag 16. april 2017

பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்!

பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்!


உடக்கு பாஸ் என்பது கிறிஸ்தவ திருப்பாடுகளை உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் ஒரு மரபு கலைவடிவம். இது பொம்மலாட்ட வைகையை சார்ந்ததாக இருப்பினும் இது பொம்மலாட்டம் அல்ல. மரத்தினாலும் வைக்கோல் உடம்பினாலும் உருவாக்கப்பட்ட உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் திருப்பாடுகளின் காட்சி ஆகும். மனிதர்களின் நடிப்பை வைத்து திருப்பாடுகளின் காட்சி காண்பிக்கப்படும் போது, அங்கு தெய்வீகம், அற்றுப்போய் இயேசுநாதாராக நடித்த அந்த நபரின் நடிப்பு பேசப்படுவதால் அங்கு தெய்வீகம் என்பது இல்லாது போகின்றது. ஆனால் பேசாலை மக்களினால் காட்டப்படும் திருப்பாடுகள். பேசாலை மக்களினால், பய பக்தியாய் ஆரதிக்கும் கர்த்தருடைய உடக்கு இங்கே நடிக்கும் போது, உண்மையில் நாம் வணங்கும் கார்த்தராகி இயேசு நம் கண் முன்னால் பாடுகள் அனுபவிப்பது போன்ற ஒரு பிரமையை மக்கள் மனதில் ஏற்படுத்தி விடுகின்றது. இதுவே பேசாலை உடக்கு பாஸின் மகாத்மியமாகும். உலகிலேயே வேறெங்கும் இல்லாத இந்த உன்னத கலை வடிவத்தினை, கடந்த இரு நூறுவருடங்களாக பேசாலை மக்கள் பாதுகாத்து பேணி வருவதையிட்டு பேசாலைதாஸ் என்ற ஒரு நபராக நான் பெருமை அடைகின்றேன். எமது மரபு சார்ந்த உடக்கு கலை வடிவம் பற்றி பேசாலைதாஸ் ஆகிய நான் என் பேசாலை உறவுகளுடன் பேசுகின்றேன்!                                                            கடந்த புனித வாரத்திற்கு முந்திய வாரத்தில் கான்பிக்கப்பட்ட உடக்கு பாஸ் பல சிறப்புகளை கொண்டிருந்தா லும், பல குறைபாடுகள் காட்சி முழுவதும் தொடர்கின்றது. உடக்கு பாஸின் உச்ச கட்டம் கடவுள் மரிக்கும் காட்சி. கடவுளே மரணிக்கி ன்றார் என்றால் அந்த காட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்களே சற்று கற்பனை பண்ணிப்பாருங்கள்! மகா பயங்கரமாக இருக்கும். மத்தேயூ எழுதிய சுவிசேசத்தின் படி, பூகம்பம் உண்டா கியது. வானம் இருளாகியது. சூரியன் பிரகாசம் குன்றி ஒளி இழ ந்தான். கல்லறைகள் திறக்கப்பட்டு ஆவிகள் அலறின. ஆலய திரைச் சீலை கிழிந்தன. பறைவைகள் சோகம் காத்தான. நிலவு அழுதது அந்தோ! படைப்பின் கர்த்தர் பிதாவே உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன் என்று உரக்க கூவி தலை சாய்க்கி ன்றார். ஆனால் நடந்து முடிந்த காட்சியில் திடீரென கறுப்பு கலர் காண்பிக்கப்படுகின்றது. அதற்கு முன்னரே கர்த்தரின் ஆவி எங்கேயோ பறந்து போய்விட்டது. காரனத்தை ஆராய்ந்தால் நூல் அறுந்துவிட்டதாம். நூல் அறுந்து போனதுக்கும், அரசியல் காரனமா கின்றது! முன்பு சலோஸ்தியான் பீரிஸ் அவர்கள் மிக அவதானமாக, நூல் வேலைகளை செய்வார் அது அவரின் வாழ் நாள் வேலையாக இருக்கும்! அந்த வேலையை அவரின் வாரிசுகள் யாராவது செய்திரு ந்தால் நூல் அறுந்துவிட்டது என்ற பேச்சுக்கே இடம் இல்லாது போயி ருக்கும். அந்த நூல் வேலையை கூட தமிழ் தேசியவாத உணர்ச்சி தான் இழுக்கவேண்டுமா? என்னே மடமைத்தனம்!
                                திருப்பாடுகளின் காட்சியின் முக்கிய இயக்குணர் கலாபூசணம் மிராண்டா ஆசிரியர் அவர்கள், அவருக்கு பின்னர் இதனை நெறிப்படுத்தும் பக்குவம் அடுத்த இளம் தலைமுறைக்கு கொடுக்கப்படவேண்டும். மேலை நாடுகளின் நவீன நாடகங்களை இயக்கி வெற்றி பெற்றவன் என்ற எனது சிறுமதியை வைத்து சொல்கின்றேன். திருப்பாடுகளின் நெறியாள்கை நிறைய குறைபாடு களைக் கொண்டுள்ளது.                                                              முதலில் ஒலி அமைப்புக்கு வருவோம், நமது உடக்குகளுக்கு வாய் பேசாது எனவே குறைந்த பட்சம் மாதா இயேசு இவர்கள் வசனம் பேசும் போது அந்த உரையாடல் அங்கிருந்து வரவேண்டும். அடுத்ததாக வசனங்கள் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பை கொண்டு வசனம் அமைக்கப்பட்டிருந்தது. உரையாடலின் வசனத்திற்கு ஏற்ப உடக்குகளினால் அசைந்து காண்பிக்க முடியாது எனவே வசன உரையாடைலை தெளிவாகவும். உள் ஆழக் குரலாக இருந்திருக்கவேண்டும். வானொலியில் பணியாற்றியவர்களுக்கு நான் சொல்வது புரியும்                                                                          இயேசு வசனம் பேசும் போது அவரின் வசனம் கருக்குள்ள பட்டயம் போல இதயத்தை ஆழ ஊடுருவும் அது அங்கு இல்லை. பூங்காவனத்தில் வந்த தொய்வு, சிலுவையில் தொங்கும் வரை இயேசுவுக்கு இருந்ததா? குதிரை ஒரு பரிட்சார்த்த‌ முயற்ச்சி முதலில் அதனை பாராட்டுவோம் ஆனால் உண்மையான குதிரையின் பொழிவு அதில் இல்லை. குதிரை நிற்கின்றது ஆனால் டொக்கு டொக்கு சத்தம் மட்டும் நிற்கவில்லை! நாலுபேர் குதிரை யை தூக்கிக் கொண்டு அலைவது அப்படியே வெளியே பார்வை யாளர்களுக்கு தெரிகின்றது. ஒளிவடிவம் காட்சிக்கு ஏற்ற விதத்தில் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் வரவேயில்லை. அடுத்ததாக காட்சிகளை தொடர்பு சாதனத்துக்கு அனுப்பும் போது பக்கத்தில் இருப்பவர்களின் அநாவசிய குரல்கள் கலந்து வெளிப்பட்டது காட்சி க்கு குந்தகம் விளைவித்தது. இப்படி  இலகுவில் திருத்த கூடிய குறை பாடுகள் அதிகம். உடக்குகள் இன்னும் பூரணமான வடிவத்திற்கு வரவில்லை, இரும்பு கம்பிகளினால் கைகள் இயக்கப்படுவது, திமிர்வாதக்காரகள் போல உடக்குகள் இன்னமும் இருக்கின்றது. குறிப்பாக கள்ளவர்கள் உடக்கு, வெருளிகள் போல, நகைப்புக்கு உள்ளாகி இருந்தது. மரணித்த காட்சி மகா மட்டமாக இருந்தது. 
                                                           இன்னும் நாம் இரு நூறு வருடத்திற்கு பின் தள்ளியே இருக்கின்றோம். எந்தவித முன்னேற்றம் இல்லை. கை, கால், தலை, வாய் கண் இவைகள் இயங்கக்கூடிய  உருவங்கள் டென்மார்க் நாட்டில் செய்கின்றார்கள் ஒரு உடலுக்கு 35 ஆயிரம் மட்டில் முடிகின்றது. நாம் நமக்கு வேண்டிய ஒப்பனைகளை செய்ய வேண்டியதுதான் மிச்சம். இனிவ்ரும் காலங்களில் திட்டமிட்டு செயல்படுவோம் வெற்றியும் காண்போம். பாடுபட்டு உழைக்க எம் ஊரவர்கள் முன்வரும் போது, சிறப்பாக காட்டி, எமது பாரம்பரிய உடக்கு பாஸை நவீனப்படுத்துவோம். மற்றப்படி பிரமாண்டமான மேடை, எம் ஊரவர்களை கட்டாயம் பாராட்டவேண்டும். தயவு செய்து ஆலையத்திலும். கடவுளிடமும். கலைவடிவத்திலும் அரசி யலை புகுத்தவேண்டாம். திறமைகளுக்கு முன் உரிமை கொடுத்து, இளம் தலைமுறைகளுக்கு வழிவிட்டு, எமது உடக்கு பாஸ் கலை வடிவத்தை மெருகூட்டுவோம் நன்றி  
 அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

torsdag 6. april 2017

இயேசுவின் இரட்சனியம் உடக்கு பாஸ் பேசாலை 2017

இயேசுவின் இரட்சனியம் 
உடக்கு பாஸ் பேசாலை 2017





                                         
உடக்கு பாஸ் பேசாலை 2017 Part 1

உடக்கு பாஸ் பேசாலை 2017 Part 2

உடக்கு பாஸ் பகுதி 3 
















                               





























                                                   

எமது ஊரின் சில முக்கிய காண்னொளிக்காட்சிகள்

எமது ஊரின் சில முக்கிய காண்னொளிக்காட்சிகள்



         முன்னாள் பேசாலை பங்கு தந்தை அவிதப்பரின் 
                                                     மரண திருப்பலி

ஆத்துமாக்கள் திருநாள்
                           
                           பாடசாலை விளையாட்டு போட்டி

                                   கரைவலை பேசாலை

                   கிறிஸ்மஸ் விழா பேசாலை இளையோர்

                             ஆலைய நிதிக்காக கரவலை

                       எமது ஊர் முதியோர் விழா காட்சி    


அன்னை மரியின் திருச்சுருப பவனி

பெரிய வெள்ளி  ஆண்டவரின் திருவுடல் ஊர்வலம்  ஆசந்தி





                 
                        மூவிராசாக்கள் வாசாப்பு ஏடு திறப்பு!

onsdag 5. april 2017

உடக்கு பாஸ் காண வாரீர் கவிதையழைப்பு

உடக்கு பாஸ் காண வாரீர் 
                          கவிதையழைப்பு


மன்னாருக்கும்,தலைமன்னாருக்கும்
இடையில் உண்டி போல ஓருராம் 
இழுவைப்படகும்,இரும்புவலையும் கரைவலையும்,கண்ணாடியிலைப்படகும் 
இங்கே இல்லையென்பது இல்லையாம்.
பற்றிமாவும்,சென்மேறிஸ்ஸும்
எம் ஊர்ப்பிள்ளைகள் பேர்சொல்லும்
கல்விக்கூடங்களாம்,அதுவேயெங்கள்
மூத்தோரும் கல்விபயின்ற கற்கூடங்களாம்.
எவ்விடம் சென்றும் வெற்றியீட்டும் விக்டரீஸ்
கழகம் உருப்பெற்றெழுந்ததும் இவ்வூராம்.                            வந்தோரை வாழவைத்ததும் இவ்வூராம்.
அவர்கள் நயவஞ்சகர்களாக மாறினாலும்,
அரவணைத்ததும் எம்மூராம்.
புகழழியாப்புலவர்கள் பலரும்                                                                 கவிப்புகழ் பாடியே
எம்மூர் பாதுகாவலியாம் வெற்றியன்னையின்
நல்லாசீர் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்ததும்                                         எம்மூரே அதுவே எங்கள் பேசாலையாம்.
சிலுவையில் இரட்ணியம் கொண்டு                                             நூற்றைம்பது வருட பாரம்பரியம் கண்டு 
இற்றைவரைக்கும் அழியாப்புகழ் கொண்டு
உடக்கு பாஸ் ஆறாம்,ஏழாம் திகதிகளில்                              காண்பிக்கப்பட இருப்பதும் எம்மூராம்                                                  அதுவும் எங்கள் பேசாலையாம்.
                                                                 யாத்தவர் ஹிலரி குரூஸ்
                                                                            தொகுப்பு பேசாலைதாஸ்

tirsdag 4. april 2017

உடக்கு பாஸ் காட்சிகள்

உடக்கு பாஸ் காட்சிகள்
மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக்கு பாஸ் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன. உடக்குகுகளினால் (மரப்பாவை)  காண்பிக்கப்படும் இக்காட்சிகள் தற்போது போர்த்துக்கல் நாட்டில்  மட்டுமே காண்பிக்கப்ப டுகின்றது. அதுவும் தெருக்காட்சி  போல விழா சமயங்களில் காண்பிக்கின்றனர். பாஸ்கா காலத்தையொட்டி இயேசுவின் பாடுகள் காட்சியானது மேலை நாடு களில் ஒரு தவக்கால பக்தி முயற்ச்சி யாக காண்பிக்கப்பட்டது இதனை  Passion play என்றும் Passo லத்தின் சொற்களினாலும் குறிக்கப்படுகின்றது. இலங்கை அரங்கியல் பல்கலைக்கழகதின் மேற்கத்திய இசை துறையில் பணியாற்றும் கே.சமரக்கோன் அவர்களின் கட்டுரை யின்  படி உலகத்திலேயே இன்று வழக்கில் இருக்கும் உடக்கு            பாஸ் பேசாலையில் மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார்.    இந்த காட்சியினெழுத்து வடிவம் Script யாக்கோல்மே கொன்ச ல்வேர்ஸ் எனும் குருவானவர் எழுதிய வியாகுல பிரசங்கத்தை அடிப்படையாக கொண்டது, சிங்களத்தில்  දුක දේශනය පසන් පොතේ dukkapraptha natya saha deshana navaye pasan potha’ இந்த உடக்கு பாஸ் கிட்டதட்ட இரு நூற்றாண்டு வரலாறு கொண்டதாகும். 

                                         போர்த்துக்கல் நாட்டு கலைப்பாரம்பரியத்து   க்கு ஏற்ற விதத்தில் பாஸ் காட்டுவதற்கான கலை அரங்கம்        1907 ஆண்டளவில் நிறுவப்பட்டுஅந்த மண்டபத்தில் பாஸ் காண்பி க்கப்பட்டது. இலங்கையில் வேறு எங்கும் காணப்ப   டாத புதுமையான அரங்க அமைப்பைக் கொண்டது இந்த மண்டபம். ஒரே நேரத்தில் நான்கு காட்சிகளை காண்பி க்கக்கூடிய விதமாக, படிப்படியாக அரங்கம் அமைக்கப்பட்டு ள்ளது. ஒரே நேரத்தில் இந்த நான்கு தளங்களிலும் உடக்குகள் நடித்துக்கொண்டிருக்கும். அதை இயக்கும் நுட்பவியலாளர்கள் மேலிருந்தும், கீழ் இருந்தும் செயல் படுவார்கள். நரகத்தின் காட்சிகள் உண்மையான நெருப்பு புகை மற்றும் தீச்சுவாலை கள் கீழ் இருந்து இயக்கப்படும் அதேவேளை மேலே வான தூதர்கள் இறங்கி வரும் காட்சி மனதுக்கு ரம்பியமாக இருக்கும். சில காலங்களில் இயேசுவின் பிறப்பு உள்ளடங்கலாகவும் காட்சிகள் காண்பிக்கப்படுவதுண்டு. இதனை லெம்பவம்   என்று அழைப்பார்கள். இயேசு மரணிக்கும் காட்சி பயங்கர மாகவும் சோகமும் திகிலும் நிறைந்ததாக காண்பிக்கப்படும். இந்த காட்சி அமரர் சலோஸ்தியான் பிரீஸ் அவர்களின் நூல் வேலைப்பாடுகளினால் நிறைந்திருக்கும். கலாபூஷணம் அந்தோனி மிராண்டா அவர்களின் ஒப்பனை மற்றும் காட்சி அமைப்புகளின் அபரா திறமை பாஸ் முழுவதும் பரவலாக அடைத்துக்கொள்ளும். இளையோர்களின் வருகையால் பாஸ் காட்சிகளில் பல புது உத்திகள் உள் புகுத்தப்பட்டன. நவீன  இசை எட்வேர்ட் பீரிஸ், சந்திப் குருஸ் இன்னும் பலர் தம் தாக்க த்தினை செலுத்தினார்கள். ஒப்பாரி பாடல்கள் கிராமத்து மண்மணக்கும் விதத்தில் திருமதி ரதி பீரிஸ், திருமதி பிரஞ்சாட்ட இவர்களினால் உள் வாங்கப்பட்டது. இன்னும் கொஞ்சம் மருவி, வசன‌ங்கள் உரை நடைகள் உள்ளே புகுத்த ப்பட்டன இதில் திரு,உதயா அவர்களின் பங்களிப்பு செல்வாக்கு செலுத்தின, இதைவிட கபித்தான் வரும் குதிரை ரிச்சா அவர்க ளினால் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு பாராட்டு பெற்றது. தற்போது காண்பிக்கப்பட இருக்கும் பாஸ் இன்னும் பல நவீன அம்சங்களை உள் வாங்கி காண்பிக்கப்பட இருக்கின்றது. கட்டுரையின் ஒரு பகுதியை ஆங்கிலத்தில் தருகின்றேன்


                              The passion play in Pesalai is unique to Sri Lanka as  it is     probably the only passion play in the world that is entirely acted  using life sized puppets. The play is based on the script ‘Viyakula  Pirisangam’ which is the Tamil version of Father Jacolme Gonsalves   Sinhala script of ‘dukkapraptha natya saha deshana navaye pasan  potha’. The Pesalai passion play has a history of performance oover 200 years. The year 1983 was when all nine acts were performed  before the ethnic unrest in the country. Since the Pesalai church and the Fatima Madya Maha Vidyalaya provided shelter to hundre of refugees till almost 2008 they had no provision to stage the passionplay again till 2000. At this point the cast had to            build a replica of the original stage its original been erected in 1907 at the Pesalai church,  at the playground of the Fatima Madya Maha Vidyalaya to perfor a few             of the acts. Since then the passion play has been performedin 2003 and then in its original ‘stage’ at the church in 2008, 2010 and 2012.   

                              The passion play of the pre-war era was performed on stage by      the actors while the readings and chants were narrated off stage.  Since 2000, under  the direction of Kalabhushana S.A. Miranda there are    hymns and pasams been sung to accompaniment on keyboard music.  Also a notable change is that there is now dialogue between the characters   and not a narration. The costumes too have undergone changes in the post   war performances. The aim of this article is to trace the roots of the music   of the Pesalai passion play and its influences on the other passion plays within Sri Lanka as this was the root and first passion play acted in  Sri Lanka from over 400 years ago. 

                                                    Another point of interest that would be investigated   is the changes made for the performance in troubled years of the past years. Video   and Audio recordings will be made with a main focus  to determine the roots of       the music of the play. This is important to my  article as the music of the Pesalai passion play is authentic and remains  without a considerable change to date. Moreover, structured and unstruc- tured interviews will be used to gather in-depth information from a variety of persons knowledgeable and involved in the Pesalai passion play.    

                                                   This esay will explore two main questions with regard to the evolution of passion play music in Sri  Lanka. The questions posed are                      (i) the relation to the cultures and music traditions that have influenced  the music of Pesalai passion play and                                                                           

 (ii) what are the music traditions that are imbibed in the Pesalai Passion Play music? The hypothesis of this view is that the Pesalai passion play has  not undergone a metamotphosis of change at many levels: Concentrating on  the music, this study states that the music is authentic and directly influenced  by the Karnatic idiom. One of its main influences is also being Konkani   Music from Goa

அன்புடன் பேசாலைதாஸ்

                                         











onsdag 29. mars 2017

சமரச‌ம் உலாவும் இடமே!

சமரச‌ம் உலாவும் இடமே!
மரணம்! மனித வாழ்வில் மிக வும் உண்மையான ஒன்று. ஆனால், எவராலும் எளிதில் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று! இறந்தவரை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் ஒரே ஆறுதல் இற ந்தவர் நல்ல நிலையை அடை ந்தார் என்பதுதான்.  “மரணத்தி ற்குப் பின் இறந்தவர் எங்கு செல்கிறார்? மரணத்திற்குப் பின் என்ன நிகழும்?” என்கிற கேள்வி பலருக்குள்ளும் இரு க்கிறது. ஆனால், மரணம் என்பது அனைத்திற்கும் ஒரு முடிவல்ல என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்கிறோம். இறந்தவ ர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்,  அவருடன் நமக்கு இருக்கும் தொடர்பு மட்டுமே முடிந்திருக்கிறது. மற்றபடி அவர் இன்னமும் இருக்கிறார். அப்படிப்பட்டவர்களை நாம் சில செயல்முறைகள் மூலம் தொட முடியும். அந்த உயிருக்கு தேவையான நன்மையை செய்ய முடியும். அன்பர்களே நோர்வே நாட்டில் சேமக்காளை அதாவது சவ‌க்காலைகளை பார்த்தால் வியப்பாக  இருக்கும். . பச்சைப் பசேலென ஒரு பூங்காவைப் போல அந்த இடம் .செழி ப்பான மரங்கள், பசுமையான சூழல், சுத்தமான நடைப்பாதை என அந்த சூழல் அங்கே ஒரு அமைதியை உருவாக்குகிறது.  குறைந்தது கால்வாசி கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றப்ப ட்டிருக்கும், குறிப்பாக கார்த்திகை மாதம் முழுவதும், கிறிஸ்மஸ் தினங்களில், இறந்தவர்களோடு இன்னமும் கிறிஸ்மஸ் கொண்டாடுகின்றோம் என்பதை நினைவுறுத்த சகல‌ கல்லறை களிலும், உறவினர்களால் பூக்களும் மெழுகுவர்த்தியுமாக கல்ல றைகள் காட்சி தரும்.   ஒவ்வொரு கல்லறைகளும் நேர்த்தியாக வரிசைகிரகமாக நிறுவப்பட்டிருக்கும். அந்த கல்லறைகள சுற்றி, அழகிய மலர்ச்செடிகள் பூத்துக்குழுங்கும்! கல்லறையில் சிரித்த முகத்தோடு இருக்கும் படங்கள், ஜீவியத்தி என்னை நேசித்த இதயங்களே! மரணத்திலும் என்னை மறவாதீர்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட சேமக்காளைக ளுக்கு செல்லும் போது மனதில் ஒரு அமைதி, இறை உணர்வுகள் பெருகுகின்றன. இந்த சேமக்காளைகள் ஆலய நிர்வாகிகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றன்.  ஆனால் எமது ஊரில் உள்ள சவக்காளையை பாருங்கள்! இடிந்து போன, மதில்கள், பாசி பட ர்ந்த கல்லறைகள், ஏழை எளிய மக்கள் என்றால் அவர்களை புதைத்த இடம் தெரியாமல் மறைந்து போகும்! பல வருடங்கள் கழித்து, ஒரு பணக்காரனுக்காக அந்த இடம் தோண்டப்படும் அதிலே அந்த பணக்காரனின் கல்லறை கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும். ஒருவேளை அந்த பணக்காரன் அநியாய வட்டியில், குறு க்கு பாதையில் செலவம் சேர்த்திருக்கலாம், ஆனால் அவனு க்காக தோண்டப்பட்ட அந்த ஏழை உத்தமராய் வாழ்ந்திருக்க லாம். சமரசம் உலாவும் இடம் மாயானம் என்பார்கள். எங்கே இருக்கின்றது சமரசம்? எங்கே இருக்கின்றது இறை நீதி?  அது போகட்டும் அன்பர்களே! சற்று சிந்தியுங்கள், அங்கே புதை க்கப்படிருப்பது யார்? உன் அப்பா, அம்மா உன்னை நேசித்தவ ர்கள். நீ நேசித்தவர்கள் அங்கே துயிலுகின்றார்கள். ஒரு நாள் நீயும் நானும் அங்கே போகப்போகின்றோம். அந்த அறுவறு ப்பான, அலங்கோலமான இடத்திலா நீயும் போய் நிரந்தரமாக படுக்கப்போகின்றாய்?  சிந்தித்துப்பாருங்கள்! ஊரின் பெரு மையை பறை சாற்ற, பல இலட்சம் செலவழித்து பாஸ் காட்டு வதில், முனைப்பாக இருக்கும், ஆலைய நிவாகிகள், ஊர்மக்கள் எமது இறுதி வீடான, நிறந்தர தூங்கும்  இடமான சவக்காலையை புணரமைத்து, அழகுபடுத்தி, வாழ்வின் மறுவாழ்வின் அர்த்த ங்களை புரிந்து கொள்வோமா?  அன்புடன் பேசாலைதாஸ் 

வண்ணப்பறவைகள்








tirsdag 28. mars 2017

சுய ஆற்றலில் விருத்தி கண்டு உலகை வெல்லுங்கள்!

என் அன்பு சின்ன மாணவர்களே! 
                                                                                    பெற்றோர்களே! இன்று கல்வி பொது தராதர சாதாரண பரீட்டை பெறுபேறுகள் வெளியாகி யுள்ளன. ஒரு சில மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் குது கலிக்கக் கூடும். முதலில் அவர்களை வாழ்த்துவோம், அவர்க ளின் சந்தோசத்தில் பங்குகொள்வோம். அதேவேளை எங்களு டைய பிள்ளைகள் அதி திறமையாக சித்தியடையவில்லையே என்ற கவலையை விட்டுத்தள்ளுங்கள்: உண்மையில் மாணவர்க ளின் ஆய்ந்து அறியும் அறிவுத்திறன். அவர்களின் ஆளுமை, படைப்பாற்றலை  இவைகளை வெளிப்படுத்துவது, இந்த பரீ ட்சைகள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் மாணவர்களின் அறிவு, உளவளம் இவைகளை எடை போட பரீட்சை ஒன்றைத்தவிர, வேறு ஒரு உத்தியும், செய்முறையும், இலங்கை கல்வி திணைக்களம் இன்னும் அறியாது உள்ளது. அப்படி அறிந்திருந்தாலும், அவற்றை நடைமுறை படுத்தும் பொருளாதார வசதிகள் இலங்கைக்கு இல்லை. பின்லாந்து நாட்டில் ஏன் நோர்வே நாட்டிலும் கூட, பிள்ளைகளின் திறமை களை அறிந்து கொள்ள, அந்த நாட்டின் கல்வித்திணைக்களம் பரீட்சைகளை நாடுவதில்லை. West Minister Education System பிரித்தா னிய கல்வி முறையை இன்றும் ஸ்ரீ லங்கா கடைப்பிடித்து வருகி ன்றது. அந்த பரீட்சை முறை,பல குறைபாடுகளை கொண்டு ள்ளது. மூன்று மணித்தியாலயத்தில் திணிக்கப்பட்ட விடய ங்களை மீண்டும் கிரகித்து அப்படியே ஒப்புவிக்கும் செயல் முறையில் பரீட்சைகள்  நடத்தப்படுவதால், மாணவனின் புலமை, அறிவு சார் ஆற்றல்,படைப்பு திறன், மதியூகம் எல்லாம் பரீட்சையில் வெளிப்படும் என்பது மடமைத்தனம்! 

                                                                                     அது ஒரு புறம் இருக்க, எல்லா மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகள் கொடுக்கப்படு கின்றனவா என்று நோக்கும் போது அதிலும் குறைபாடுகளே தென்படுகின்றன. உண்மையில் இப்படிப்பட்ட பரீட்சைகளில்,

பாடசாலையின் தரம், ஆசிரியரின் பங்களிப்பு, அதிலும் மேலாக பெற்றோர்களின் கல்வித்தகமைகள், அவர்களின் விடாப்பிடி வாத திணித்தல் என்பன பின்புல காரணியாகின்றது. என்னை பொறுத்தவரை, கல்வி அறிவற்ற, ஏழை குடும்பத்தை பின்னணி யாக கொண்ட ஒரு மாணவன் குறைந்த பட்சம் இரண்டு ஏ பெறு பேறு எடுத்தால் அதுவே மாபெரும் வெற்றியாக கணிக்கப்படும். ஏனெனில் அந்த மாணவன் தன் சுய  சொந்த ஆற்றலை கொண்டு மிளிர்கின்றான். இதற்கு என் சொந்த கல்வி அனுப வமே எனக்கு சாட்சியாக விளங்குகின்றது. 

                                                                                            நானும் எனது அண்ணனும், விஞ்ஞான பாடம் படிக்கவேண்டும் என ஆசைப்பட்டோம்.

வறுமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. சராசரி பெறுபேறுக ளுடன் யாழ் பல்கலைக்கழகம் சென்றோம். அப்பொழுது புக ழ்பெற்ற கல்லூரிகளில் இருந்து அதி திறமையான பெறுபேறு களில் யாழ் மாணவர்கள் எங்களோடு படித்தார்கள். ஆனால் அவர்களை எல்லாம் பின் தள்ளி, நானும் எனது அண்ணன் எட்வேட் பீரிஸ் அவர்களும் சிறப்பு நிலை ( Special B.A. Hones in Economics) and ( Special B.A. Hones in Political Science)  பட்டம் பெற்றோம், அதிலும் எனது அண்ணன் என்னைவிட ஒருபடி மேலே சென்று Upper Class எடுத்தார். மூன்று ஏ க்களோடு வந்த மாணவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. எனவே மாணவர்களே பெற்றோர்களே பரீட்சை பெறுபேறுகளையிட்டு கவலை ப்படாமல் சுய ஆற்றலில் விருத்தி கண்டு உலகை வெல்லுங்கள் நன்றி. அன்புடன் பேசாலைதாஸ்

வஞ்சிக்காதே ! வண்ண நிலவே!

வஞ்சிக்காதே ! வண்ண நிலவே!


வாடைக்காற்று தன் மூர்க்கத்தை இழந்து, மெல்ல வீசிகொண்டி ருந்தது. சித்திரை தொடங்கிவி ட்டாலே வாடைக்காற்று தன்  மூர்க்கம் தணிந்து, வரவிருக்கும் சோழக அத்தானுக்காக காத்திரு க்கும். வாடைக்காற்று தன் ஆக்ரோசமெல்லாம் இழந்து மெல்ல வீசுகின்ற போது, கரை யோர மக்கள் மனதிலும், அவர்க ளின் உடலிலும் இனம் புரியா சோர்வு தொற்றிக்கொள்ளும். தென்னை வட்டுக்குள், நிழலுக்காக உட்கார்ந்த பெண் குயில், ஏதோ ஒரு தவிப்பில் தன் இணையை கூவியழைக்கின்றது. மிக நீண்ட பொழுதாய் தன் இணை தேடி அலைவதைப்போல அதன் இனிய குரலில் ஒரு மெல்லிய சோகம் இழையோடியது. அந்த குயிலின் குரலை கேட்க மீராவின் கண்களில் கண்ணீர் சுரந்து அவளின் பட்டுப்போன்ற மிருதுவான கண்ணங்களில் உருண்டன. கூடவே அவள் எண்ணங்களும் சோகத்தை அடை காத்தன. " மா பாவி இவன்இப்படி செய்துபோட்டானே, ஆண்கள் தன் காதலை வெளிப்படுதினால், பெண்கள் அதனை நிராகரிப்பதை அவமானமாக கருதும், இந்த ஆண் ஆணவப் போக்கை, கடவுள் எப்போதுதான் ஆண்களின் மனதில் இருந்து நீக்கப்போகின்றாரோ? ஒருவேளை கடவுளும் இதனை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் தவிக்கின்றாரோ,,, "  மீராவின் மனம், அவள் எண்ணங்களோடு  போராடியது
                                          ஆத்திதன் அவனை ஆதி என்றுதான் ஊர்க்காரர்கள் அழைப்பார்கள். கட்டழகனாக இருந்தாளும், ஊர் சுற்றும் கட்டாக்காலி அவன். அழகான பெண்களுக்குப் பின்னால் தெரு நாய் போல அழைவது, அவன் இயல்பு. கொஞ்சகாலம் அவன் மீராவை வளைய வளைய சுற்றித்திரிந்தான். மீராவோ, அவன் காதலை அடியோடு வெறுத்தாள், அவன் சேட்டைகள் பொறுக்கமா ட்டாள் மீரா ஊரில் உள்ள அருட்குரு ஒருவரிடம் விசயத்தை சொல்லி, ஆதியின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். காலங்கள் உருண்டன. ஆதி வன்னியில் ஒரு அகதி பிள்ளையோடு தொடர்பு கொண்டு வன்னிக்கே போய், அங்கே இருந்துவிட்டான். மீராவுக்கு பெற்றோர்கள் மட்டக்களப்பில் இருந்து நல்ல படித்த பையனை கல்யாணம் செய்துவைத்தார்கள். மீராவை பெண்பார்க்க வந்த இடத்தில் ரமேஸ் மீராவின் அழகில் மயங்கி சீதனம் எதுவும், வேண்டாம், மீராவுடன் இந்த ஊரிலேயே வாழ்வேன் என்று, ஒரே அடியாக சொல்லிவிட்டான்.பட்டதாரியான ரமேஸ், வங்கியில் மேலாளராக வேலை பார்த்தவன் மீராவுக்காக வேலையில் இடம் மாற்றம் கேட்டு, மீராவின் ஊருக்கே வந்துவிட்டான். மீரா ரமேஸ் இல்லறவாழ்வு இனிமையாக நகர்ந்தது.

                                                                           இந்தியாவின் உதவியுடன் வீட்டுத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட காலம் அது, ரமேஸ் வீட்டு திட்டத்திட்டங்களின் பணிப்பாளராக அவனது வங்கியால் நியமிக்கப்பட்டிருந்தான். ஊரில் உள்ளவர்களின் படிவங்களின் தன்மைக்கு ஏற்ப, ரமேஸ் வீட்டுத்திட்டத் திற்கான கடனையும் ஆலோசனைகளையும் வழங்கி வந்தான். ஆதித்தனும் வன்னியில் இருந்து, குடும்ப மாக அவ்வூருக்கு வந்திருந்தான். எல்லோரையும் போலவே ஆதியும் வீட்டு திட்ட கடனுக்காக மனுச் செய்திருந்தான். ஆனால் அவனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதற்கு காரனம், ஆதி, வீட்டுத்திட்டத்திற்காக மனுப்பண்ணின காணி, முருகன் கோவிலுக்கு சொந்தமானது என காரனம் காட்டி, வேறு ஒரு சொந்த கானியை சமர்ப்பிக்கும் படி கேட்டு, ஆதியின் கடன் விண்ணப்பம் ரத்தாகி இருந்தது, இது மீராவின் கணவனின் திட்டமிட்ட செயல் என்றும், மீரா சந்தர்ப்பம் பார்த்து பழிவாங்குகி ன்றாள் என்று தனக்குள்ளே கொதிப்படைந்தான் ஆதி.

                                                                        ஆத்திரம் கொண்ட ஆதி, நேராக வங்கிக்கு சென்றான். ரமேஸிடம் கடன் விண்ணப்ப‌ம் ரத்தாகியது தவறு என்றும், ரமேஸும் அவன் மனைவியும் தன்னை பழி வாங்குகின்றார்கள் என்றும், ரமேஸின் மனைவி தனது முன்னாள் காதலி என்றும், தனக்கும் அவளுக்கும் தொடர்பு இருந்தது என்றும், நான் அவளின் காதலை நிராகரித்தமையால், தன் கணவனின் அதிகாரத்தை தவறாக பயண்படுத்தி தன்னை பழிவாங்குவதாக சத்தமிட்டு வங்கியில் கத்தினான். வாடிக்கையாளர்கள், அலுவல ர்கள் மத்தியில் மீராவை பழி சுமத்துகின்றானே என எண்ணி, ரமேஸ் தலை குனிந்து நின்றான்.
                
                                                                           அன்று வீட்டுக்கு திரும்பிய ரமேஸ், மீராவிடம் முகம் நிமிந்து பேசவே இல்லை. சோர்ந்து போயிருந்தான்.
கையில் காபியுடன் வந்த மீரா " என்னங்க ஒரு மாதிரி இருக்கிறீங்க, தலை வலியா,, மாத்திரை ஏதாச்சும்,,,,," என்று இழுத்தவளை, ரமேஸ் இடை மறித்து " மீரா யார் அந்த ஆதி?" சற்றும் எதிர்பாராமல் ரமேஸிடம் இருந்து வந்த அந்த கேள்வியால் நிலை குழைந்தாள் மீரா! ஒருமாதிரி தன்னை ஆசுவாசப்படுத்திகொண்டு,நடந்தை   அப்படியே விபரித்தாள் மீரா. 

" மீரா இதை நீ ஏன் என்னிடம் முன்பே சொல்ல வில்லை?" 
 "முன்பு என்றால் நம் திருமணத்திற்கு முன்பா? பின்பா?" அச்சத்துடனும், வியப்புடனும் மீரா கேட்டாள்.
 "அதுவல்ல பிரச்சனை எதுவாயிருந்தாலும் மீரா,  எதுவானாலும் எனக்கு தெரியும் முன்னே நீயாக உன் வாயால் நான் கேட்டிருக்க வேண்டும். அடுத்தவன் வாயால்,,,,, அவமானமாக கருதுகின்றேன்" இது ரமேஸ்.
 " இதில் என் தப்போ தவறோ இல்லை, அதைவிட அது ஒன்றும் எனக்கு பெரிய விடயமாக தெரியவில்லை" இது மீரா சொன்னது. 

இந்த உரையாடலுக்குப் பின் இருவருக்கும் இடையில் கலகலப்புகள், ஊடல் சில்மிஸங்கள். சிணுங்கல்கள் எல்லாமே வற்றிப்போயி ருந்தன. வற்றிய‌ குளத்து கொக்கு போலத் துவண்டாள் மீரா.

                                             தென்னம் வட்டுக்குள் நிழலுக்காக ஒதுங்கிக் கொண்ட அந்த குயிலின் சோக அழைப்பு,,, சோக ராகமாக காற்றிலே 
கலந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. கன்னங்களில் உருண்ட கண்னீரை துடைத்துக்கொண்டு, எதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாய் கடிதம் ஒன்றை எழுதினாள்,,, 

                                      என் அன்பு ரமேஸுக்கு. நீங்கள் எனக்கு கிடைத்தது இறை வரம் என்று தான், இதுவரையும் எண்ணுகின்றேன். இனிமை குன்றாதா உங்கள் அன்பில், நான் திளைத்து இருந்தேன். தேனுக்குள் விழுந்த எறும்பாக, உங்கள் தித்திப்பான அன்பிலே உலகை மறந்தேன். என் அன்பே! எதுவானலும் நான் உங்களிடம் முன்பே சொல்லி இருக்கவேண்டும். சொல்லாதது என் தவறுதான். எதோ ஒரு குற்ற உணர்வு என்னை வாட்டுகின்றது. என் அன்பே என்னை மன்னி த்துவிடு! இந்த கடிதம் நீங்கள் வாசித்த பின். ஏற்கனவே உயிரை மாய்த்துக்கொள்ள, வாங்கியிருக்கும் பொலிடோல் போத்தல் கலியாகிவிடும். என்னை மன்னித்து விடுங்கள் ரமேஸ்! இப்படிக்கு உங்கள் தித்திக்கும் அன்பை இழக்கும் அபாக்கியவதி மீரா.

                                                   கடிதத்தை எழுதி முடித்த மீரா, அதை ரமேஸின் கைகளில் கிடைக்கும் படியாக, ரமேஸின் மோட்டர் சைக்கில் திறப்பு க்கோர்வையை அதன்மேல் வைத்து,   கடிதத்தை  மேசை மீது வைத்து விட்டாள். வழமைபோல ரமேஸ் வங்கிக்கு கிளம்பினான். மேல் மாடி யின் விறாந்தாவில் ரமேஸின் கை அசைவுக்காக வழமை போல காத்திருந்தாள் மீரா.  . ரமேஸ் கை ஏதும் அசைக்காமல் விருட்டென்று கிளம்பிவிட்டான் மாடியை விட்டு கீழே வந்த மீரா. கடிதத்துக்கு மேலே. மோட்டார் சைக்கிள் திறப்புக்கோர்வை இருப்பதைக் கண்டு வியப்புற்றாள். 
     
                                             அப்போதுதான் அவள் நினைவுக்கு வந்தது அவர் நேற்று தன் மோட்டார் சைக்கிள் பழுதுதாகி அதை  கராஜில் விட்டு விட்டு தன் நண்பரின் சைக்கிளில் வீட்டுக்கு வந்தது. கடிதத்தை வாசித்தார இல்லையா என்று அறிய மீரா கடிதத்தை எடுத்தாள். அதில் ரமேஸின் கை எழுத்துக்கள்,,, 

                                   என் அன்பு மீரா! உன்னை பற்றி எனக்கு தெரியாதா என் வானம் என்ற இதயத்தில் கொழுவிருக்கும் இதய நிலா நீ. நான் அன்று உன்னிடம் கேட்டதை அன்றே நான் மறந்துவிட்டேன். அதை நீ எனக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்பதையும் நான் உணர்ந்து கொண்டேன். நீ தான் வீணாக உன் மனதை குழப்பி ஒரு வாரமாக எனக்கு வரவேண்டிய முத்தங்கள், இறுக்கமான அணைப்பு க்கள், இன்பமான உரைஞ்சல்கள் எல்லாவற்றையும் எனக்கு தர மறந்துவிட்டாய்,, நான் தவித்த தவிப்பு எனக்கல்லவா தெரியும். என் அன்பே பொலிடோல் போத்தல் முழுவதையும் குடித்து          என்னை இறுதியில் வஞ்சிக்காதே ! வண்ண நிலவே!! குடித்த பின் பாதியை வை, நானும் குடித்து அன்னோடு மாய்கின்றேன். நிலவில்லாமல் ஒரு வானமா அது நானா?    இப்படிக்கு உன் ரமேஸ்.
                                                       கடிதத்தின் இறுதி பந்தியை ஓராயிரம் முறை படித்தாள் மீரா!  வாடா, வா ரமேஸ!, இன்று உன்னை என்ன செய்கின்றேன்  பார். நீ போதும் போதும் என்று சொல்லும் வரை,,,,,,,,,,,
 மனசில் எதோ நினைத்துக் கொண்டு, ஆவேசமாக லீப்ஸ்டிக்கை தன் உதட்டில் தேய்க்கின்றாள் மீரா!     யாவும் கற்பனையே,,,

                                                          பேசாலைதாஸ்    

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...